மேலும் அறிய

பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பிய 78 ஏரிகள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 78 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவிந்தவாடி, கால்வாய், துாசி மாமண்டூர் கால்வாய், கம்ப கால்வாய் ஆகியவற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது , ஏரிகள் நிரம்பி வருகின்றன.

பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பிய 78 ஏரிகள்
 
தடுப்பணைகள்
 
பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், பழையசீவரத்தில், 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் உள்ள ஈசூர்- வள்ளிபுரம் மற்றும் வாயலுார் ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்யாற்றில் உள்ள வெங்கச்சேரி தடுப்பணையும் நிரம்பியுள்ளது. பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கம்ப கால்வாய் மூலம், 82 ஏரிகள் நிரப்ப முடியும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். பாலாற்றில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் தற்போது உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். நேற்றைய கணக்கெடுப்பின்படி, பாலாற்றில் 5000 கன அடி நீர் செல்கிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பிய 78 ஏரிகள்
 
கடலுார் - வாயலுார் முகத்துவார படுகை தடுப்பணை பகுதியில், 5 அடி ஆழம் நீர் நிரம்பி, உபரி நீர் 7 செ.மீ., உயரத்தில், வினாடிக்கு, 1,360 கனஅடி நீர் வீதம், நேற்று வெளியேறியது. இப்பகுதிக்கு, வடமேற்கில், ஈசூர்-வல்லிபுரம் தடுப்பணை பகுதியிலும், நீர் நிரம்பி, முகத்துவாரம் நோக்கி பெருக்கெடுக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அணை பகுதியில் வெளியேற்றப்பட்ட நீர், இப்பகுதியை அடைந்தால், உபரி நீர், 1 அடி உயரத்தில், வினாடிக்கு, 5,000 கனஅடி வெளியேறும் என, பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பிய 78 ஏரிகள்
 
ஏரிகள்
 
தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 78 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 133 ஏரிகள் 70% முதல் 100% கொள்ளளவையும்  125 ஏரிகள் 50% முதல் 75% கொள்ளவையும், 183 ஏரிகள் 25% முதக் 50% கொள்ளளவையும், 350 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான கொள்ளளவிலும் ]நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பிய 78 ஏரிகள்
 
காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பி கலங்கள் வழியாக நீரை வெளியேற்றி வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்பம் கால்வாய் மூலம் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் ஏற்கனவே தாமல் பெரிய ஏரி நிரம்பிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் பெரிய ஏரியான  கோவிந்தவாடி அகரம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஆகிய ஏரிகள்  கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Embed widget