மேலும் அறிய

கடலூரில் சிபிஐ நடத்திய மக்கள் நாடாளுமன்றம்...!- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

’’ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட, ஊளர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் முடிவு'’

கடந்த வாரம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மத்திய அரசை கண்டித்து "மக்கள் நாடாளுமன்றம்" என மாதிரி நாடாளுமன்றத்தை அந்தந்த ஊர்களில் நடத்தி  புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அறிவித்தார். புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் 300 ஆவது நாளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், 2021 ஜூலை 18ஆம் தேதி கூடிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு நாள் கூட மக்கள் பிரச்சினைகளைப் பேசவிடாமல் ஆளும் பாஜக, நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட, ஊளர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மக்கள் நாடாளுமன்றம் ஆனது வரும் 23.8.2021 திங்கள் முதல் 27.8.2021 வெள்ளி வரை ஒரு வாரம் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த போகிறோம் என அறிவிக்கப்பட்டது.

கடலூரில் சிபிஐ நடத்திய மக்கள் நாடாளுமன்றம்...!- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

அதன்படி இன்று கடலூர் தபால் நிலையம் அருகே கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களின் பார்வையில் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்தப்பட்டது. அதில் கடலூர் தபால் நிலையம் அருகில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தேசிய கொடி ஏற்றி நாடாளுமன்றத்தை தொடங்கினர். பின் கட்சியின் மூத்த தலைவர் சபாநாயகராகவும் ,கட்சியின் பிற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றனர். இந்த, மாதிரி நாடாளுமன்றத்தின் தொடக்கத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளில் போராட்ட காலத்திலேயே உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, அதற்கு பின் தொடங்கிய மக்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் என அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். 

கடலூரில் சிபிஐ நடத்திய மக்கள் நாடாளுமன்றம்...!- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

அதில் மத்திய அரசால் கடந்த வருட செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும், மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெற கோரியும், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஓப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றிட கோரியும், தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பறித்துவிட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசின் பொது சொத்துக்களை தனியார்களுக்கு விற்கும் திட்டத்தினை கைவிடக்கோரியும் வாதங்கள் எழுப்பப்பட்டன, அதற்கு பின் முன் நிறுத்தப்பட்ட வாதங்களின் மீது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதம் நடைபெற்றது. அதற்கு பின் அனைத்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அனைத்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டாக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பின் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget