மேலும் அறிய

Crime: டம்மி துப்பாக்கி வைத்திருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது!

வாகனத்தில் வந்த அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த நிலையில், அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் பொம்மைத் துப்பாக்கி மற்றும் 11 நாட்டுவெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

டம்மி துப்பாக்கி வைத்திருந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டு ஒன்று, இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் குற்றச் செயல்களைக் கண்காணித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில், பல்வேறு சிறப்பு சோதனைகள் மற்றும் வாகன தணிக்கைகளும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வானகரம் பகுதி அருகே காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அதன்பேரில் மேற்படி நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதில் பொம்மைத் துப்பாக்கி மற்றும் 11 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பொம்மைத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த செல்வம் (எ) ரோஸ் பாக்யம், வ/45, என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பொம்மை துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, இரண்டு செல்போன்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான கூழாங்கற்கள், ஆணிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட செல்வம் (எ) ரோஸ் பாக்யம் என்பவர் சோமங்கலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று உள்ளதும் தெரிவந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட செல்வம் (எ) ரோஸ் பாக்யம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றொரு சம்பவம்

முன்னதாக இதேபோல் கஞ்சா செடி வளர்த்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை, எம்ஜிஆர் நகர், பாரதிதாசன் தெருவில், அதிகாலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அடுத்தடுத்து மூன்று பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அதேவேளை சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை வைத்து 17 வயது சிறுவனை அடையாளம் கண்ட காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக் (வயது 20) வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது அபிஷேக்கின் மொபைல் போனை சோதனை செய்தபோது, கஞ்சா செடியின் புகைப்படத்தை காவல் துறையினர் பார்த்துள்ளனர்.

மேலும் சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு தண்ணீர் தொட்டிக்கு அருகே மறைவாக மண் தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget