மேலும் அறிய

சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல் !! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

விபச்சாரத்திற்கு சிறுமிகளை பயன்படுத்திய கும்பல்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும் , 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளை இட்லி கடை நடத்தி வந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 32) தனது கள்ளக் காதலனான ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். தொடர்ந்து மாணவிகள் இருவரையும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். பின்னர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று செல்வராஜ் (வயது 58) என்பவர் மூலம் கட்டாயப்படுத்தி தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

மாணவிகள் விற்பனை

தனலட்சுமி திட்டக்குடியைச் சேர்ந்த மத போதகரான அருள்தாஸ் என்பவரின் வீட்டிற்கு மாணவிகள் இருவரையும் 2 நாட்கள் அனுப்பி வைத்தார். அங்கு மாணவிகளுடன் மதபோதகர் அருள்தாஸ் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். தனலட்சுமியும், கலாவும் புரோக்கர்களுடன் சேர்ந்து 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

பின்னர் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) அவரது மனைவி தமிழரசி (வயது 39) ஆகியோருக்கு மாணவிகளை விற்பனை செய்தனர். அவர்கள் மாணவிகள் இருவரையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

தப்பி சென்று மாணவிகள் புகார்

சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து மாணவிகள் இருவரும் திட்டக் குடிக்கு தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, மதபோதகர் அருள்தாஸ், கபிலன் உட்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி உட்பட 4 பேர் தலைமறைவாகினர்.

எஞ்சிய 19 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான 4 பேர் தவிர்த்து 19 பேர் மீது கடலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் போதே இருவர் மரணம் அடைந்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கில் 16 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு மத போதகர் அருள் தாசுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு தனித் தனியாக சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், ஜெபினா (வயது 39) ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். இவர்களில் ஜெபினா போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜெபினாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கில் எஞ்சிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget