மேலும் அறிய

சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல் !! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

விபச்சாரத்திற்கு சிறுமிகளை பயன்படுத்திய கும்பல்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும் , 8 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளை இட்லி கடை நடத்தி வந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 32) தனது கள்ளக் காதலனான ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். தொடர்ந்து மாணவிகள் இருவரையும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். பின்னர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த விபச்சார புரோக்கரான கலாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று செல்வராஜ் (வயது 58) என்பவர் மூலம் கட்டாயப்படுத்தி தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

மாணவிகள் விற்பனை

தனலட்சுமி திட்டக்குடியைச் சேர்ந்த மத போதகரான அருள்தாஸ் என்பவரின் வீட்டிற்கு மாணவிகள் இருவரையும் 2 நாட்கள் அனுப்பி வைத்தார். அங்கு மாணவிகளுடன் மதபோதகர் அருள்தாஸ் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். தனலட்சுமியும், கலாவும் புரோக்கர்களுடன் சேர்ந்து 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

பின்னர் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) அவரது மனைவி தமிழரசி (வயது 39) ஆகியோருக்கு மாணவிகளை விற்பனை செய்தனர். அவர்கள் மாணவிகள் இருவரையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

தப்பி சென்று மாணவிகள் புகார்

சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து மாணவிகள் இருவரும் திட்டக் குடிக்கு தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, மதபோதகர் அருள்தாஸ், கபிலன் உட்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி உட்பட 4 பேர் தலைமறைவாகினர்.

எஞ்சிய 19 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான 4 பேர் தவிர்த்து 19 பேர் மீது கடலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் போதே இருவர் மரணம் அடைந்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கில் 16 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு மத போதகர் அருள் தாசுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு தனித் தனியாக சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், ஜெபினா (வயது 39) ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். இவர்களில் ஜெபினா போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜெபினாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கில் எஞ்சிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? இப்போதும் கூட விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? இப்போதும் கூட விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Embed widget