மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Electricity Bill ; 8 லட்சம் மின் கட்டணம் ! மூதாட்டி வீட்டில் அதிர்ச்சி , அதிகாரிகள் மீது புகார் !

சென்னையில் மூதாட்டி வீட்டிற்கு ரூ.8 லட்சம் மின்சார கட்டணம் வந்ததால் அதிர்ச்சி

ரூ.8 லட்சம் மின்கட்டணத்தை பார்த்து அதிர்ந்த குடும்பம்

சென்னை பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி ராணி. இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சராசரியாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் வருவது வழக்கம். இந்த மாத கணக்கீட்டின் படி 73024  யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக 8 லட்சத்து 38 ஆயிரத்து 747 ரூபாய் மின் கட்டணம் என தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியின் மகள் மணிமேகலை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

கோவிலுக்கு ரூ. 1 லட்சம் மின்கட்டணம்

சென்னை பாடி திருவலீஸ்வரர் நகரில் வெற்றி விநாயகர் ஆலயத்திற்கு மின் கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும் , ஜெகதாம்பிகை தெருவில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மின்கட்டணமும் இந்த மாதம் வந்துள்ளது.

தொடர்ச்சியாக பாடி திருவலீஸ்வரர் நகரில் உள்ள மக்களுக்கு மின் கட்டணம் இலட்சக்கணக்கில் வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தவுடன் அச்சத்தில் உள்ளனர். மேலும் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

அதிக மின்கட்டணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராணியின் மகள் மணிமேகலை ;

ஒவ்வொரு மாதமும் வருவது போல அதிகாரிகள் மின் பயன்பாட்டை ரீடிங் எடுத்துச் சென்றனர். பின்னர் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு 8,38,747 ரூபாய் கட்ட வேண்டுமென குறுஞ்செய்தி வந்தது பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து எனது மகன் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தேன்.

கடன் வாங்கி EB பில் செலுத்தினேன்

அதிக தொகை வருவது இது முதன்முறை அல்ல என்றும் , கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக திருமங்கலத்தில் உள்ள மின் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தேன். புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மின்கட்டணத்தில் பாதி தொகையை மற்றும் கட்டினால் போதும் என தெரிவித்ததால் கடன் வாங்கி தொகையை செலுத்தினேன். இந்த மாதம் 8 லட்சத்திற்கும் மேலாக மின்கட்டணம் வந்துள்ளது எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என தெரிவித்தார். 

தவறுதலாக கணக்கீடு - பணியிடை நீக்கம்

ரூ. 8 லட்சத்து 38 ஆயிரம் மின் கட்டணம் தொடர்பான புகாருக்கு திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா சௌந்தரபாண்டியனிடம் கேட்கும் பொழுது திருவலிஸ்வரர் நகர் பகுதியில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர் தவறுதலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளதாகவும் மின் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உரிய விளக்கம் கேட்டுள்ளதாகவும் , இனிவரும் நாட்களில் மின் கணக்கீடு தொடர்பான எந்த புகாரும் வராமல் நடவணிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget