மேலும் அறிய
Electric Trains | பராமரிப்புக் காரணங்களுக்காக கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் இன்று ரத்து..
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது

ரயில்
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் மற்றும் தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் 75-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள். சென்னை, தாம்பரம் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்றும், வரும், 6, 8, 11 மற்றும் 13-ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படவுள்ளது. பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அதற்கேற்றார்போல் பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக , கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 10:56 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, நண்பகல் 12:20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், இன்றும், வரும், 6, 8, 11 மற்றும் 13-ஆம் தேதிகளிலும், இருவழியிலும், காட்டாங்கொளத்துார் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன
கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 11:50 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, மதியம் 1:00 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், இன்றும், வரும், 11-ஆம் தேதியும், இருவழியிலும், காட்டாங்கொளத்துார் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 10:10 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, காலை 11:30 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், வரும், 6, 8 மற்றும், 13-ஆம் தேதிகளிலும், இருவழியிலும், காட்டாங்கொளத்துார் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் முழுவதுமாக செப்டம்பர் 1-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு பதிலாக, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு பகல், 12:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருமால்பூரில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை 10:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், வரும், 6, 8 மற்றும், 13-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு பதிலாக, திருமால்பூரில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, இந்த நாட்களில், பகல் 12:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதால், பொதுமக்கள் அதற்கேற்றார்போல் தங்களுடைய பயண திட்டத்தை மேற்கொள்ளுமாறு, ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement