Chennai Power Cut: சென்னையில செப்டம்பர் 9-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Chennai Power Cut: சென்னையில் நாளை செவ்வாய்கிழமை (09.09.2025) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மீஞ்சூர்
TH ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், BDO அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், RR பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, SR பாளையம், GR பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுத்திகைமேடு, கரையான்மேடு
அண்ணா சாலை
அங்கப்பன் தெரு, மூர் தெரு, இரண்டாம் சந்து கடற்கரை சாலை, லிங்கிசெட்டி தெரு, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, எர்ரபாலு தெரு, லேன் கடற்கரை சாலை, மூக்கர் நல்லமுத்து தெரு, மூர் தெரு, அங்கப்பன் தெரு, பங்குச் சந்தை, இந்தியன் வங்கி I, II, இயேசு அழைக்கிறார், HSBC, UTI, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, ஆர்மேனியன் தெரு, கூடுதல் சட்ட அறை, எஸ்பிளனேட் சாலை, NSC போஸ் சாலை, பத்ரியன் தெரு, பந்தர் தெரு, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, ஸ்ட்ரிங்கர் தெரு, உம்பர்சன் தெரு, குறளகம், சட்டக் கல்லூரி பம்பிங் ஸ்டேஷன், MMC ஆண்கள் விடுதி.
கொரட்டூர்
மண்ணூர்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்டிஎச் ரோடு, பாடி, முகப்பேர் ரோடு, டிஎன்எச்பி, கேஆர் நகர், தில்லை நகர், கண்ணகி நகர், ஜம்புகேஸ்வரர் நகர்.
போரூர்
ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் முதல், இரண்டாம் Phase, ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலை, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்ன போரூர், வானகரம், பரணிபுதூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியாரகரம், பூந்தமல்லி ரோடு, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















