மேலும் அறிய

விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் - மனைவி.. அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்.. வழக்கு விவரங்கள் என்ன?

தங்களை கணவன் - மனைவியாக கருதாமல்,  விருந்தினர்களாக பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தையின்  நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும் என பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் - மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார். 
 
தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம் தான் திருமணம் என்றும், அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய இருவரின் கடமை எனவும் குறிப்பிட்ட நீதிபதி, பிரிவு என்கிற துரதிர்ஷ்டத்தால் கணவன் மனைவிக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும்,  குழந்தைகள் அதன் பாதிப்பை உணர்வதுடன், மன வலியை அனுபவிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
 
பிரிந்த தம்பதியர், பரஸ்பரம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள  வேண்டிய அவசியமில்லை என்றாலும், குழந்தைகள் முன் மனிதநேயத்துடனும் நடந்துகொள்வது அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.
 
கணவன், மனைவி பிரிந்தாலும், இருவரையும் அணுகவும், அன்பு மற்றும் பாசத்தை பெறவும் குழந்தைகளுக்கு உரிமை உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சக துணையை புறக்கணிக்கும் நிகழ்வுகளை பார்க்கும் குழந்தைகளும், தங்களை பார்க்க வரும் பெற்றோரை அலட்சியமாக நினைக்கத் தூண்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும், இது குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் செயல் எனவும் எச்சரித்துள்ளார். 
 
ஒவ்வொரு குழந்தைக்கும், தங்கள் பெற்றோரிடம் இருந்து மிரட்டல் இல்லாத, அன்பான உறவைப் பெற உரிமை உள்ளதாகக் கூறிய நீதிபதி, பெற்றோரில் ஒருவர் இந்த உரிமையை மறுப்பது கூட  குழந்தைகளை தவறாக நடத்துவது தான் எனவும் கூறியுள்ளார்.
 
வெறுப்பு என்பது இயற்கையான உணர்வல்ல; அது கற்பிக்கப்படுகிறது என்றும், வெறுப்பையும், அச்சத்தையும் ஒரு குழந்தைக்கு கற்பிக்கும் போது, அது குழந்தையின் மனநலத்துக்கு ஆபத்தாகி விடும் எனவும் எச்சரித்த நீதிபதி, குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது குழந்தையின் நலனுக்கு முக்கியமானது என அறிவுறுத்தியுள்ளார்.
 
பிரிந்து வாழும் தம்பதியர், குழந்தையை பார்க்க உள்ள உரிமை குறித்து அக்குழந்தைக்கு விளக்கி, அவர்களுடன் நேரம் செலவிட செய்ய வேண்டும் எனவும், பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி,  குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனவும், அதன் மூலம், ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தை பெற்றோருடன் செலவிடும் நேரத்தை மகிழ்வானதாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget