மேலும் அறிய

சென்னையில் 2 சோழர் கால சிலைகள் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து 2 சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் வரலாற்று அருங்காட்சியகத்தில், ( தட்சிண சித்ரா ) இரண்டு சோழர் கால சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு, இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால உலோக சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல், தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிலைகள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழுவிற்கு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான குழு கடந்த 6ம் தேதி தட்சிண சித்ரா வரலாற்று அருங்காட்சியகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காட்சிப்படுத்தப்பட்ட சிலைகளில் வீணாதரர் சிலை, ரிஷப்தார் சிலை என 2 சிலைகள் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் என தெரியவந்தது.

சென்னையில் 2 சோழர் கால சிலைகள் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
 
உடனே அருங்காட்சியகத்தின் நிர்வாகிகளிடம் இந்த இரண்டு சிலைகள் குறித்த ஆவணங்களை கேட்ட போது, 'இந்த சிலைகளை தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வமான்ய தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, எங்கள் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்' என தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணியை தொடர்பு கொண்டு சிலைகள் குறித்து விசாரணை நடத்திய போது, முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், நன்கொடையாக வழங்கிய சிலைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.

சென்னையில் 2 சோழர் கால சிலைகள் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
 
அதைத்தொடர்ந்து அருங்காட்சியகத்தின் மேலாளர் அசோக்குமாரிடம் அதிகாரிகள் சட்ட விரோதமாக பழங்கால சிலைகள் வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர் 2 சிலைகளையும் திரும்ப சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், திருடப்பட்ட சிலைகளை நன்கொடையாக வழங்கிய மாசிலாமணி மீதும் அருங்காட்சிய மேலாளர் அசோக்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மாசிலாமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சிலைகள் சோழர் காலத்தை சேர்ந்த பழமையானது என்று தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவித்தனர். பிரபலமான அருங்காட்சியகத்தில் இரண்டு சோழர்கள் சிலை மீட்க பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
Embed widget