மேலும் அறிய

செங்கல்பட்டில் இருந்து தென்மாநிலங்களுக்கு ஹோல் சேல் முறையில் கஞ்சா விற்பனை- 11 பேர் கைது

இருவேறு நாட்களில் இருவேறு இடங்களில் இருந்து 90 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்  அருகே  படாளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் ஆந்திரா, தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மொத்தமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டில் இருந்து தென்மாநிலங்களுக்கு ஹோல் சேல் முறையில் கஞ்சா விற்பனை- 11 பேர் கைது
 
இது தொடர்பாக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சங்கர் (24), ராமுடு (28), கார்த்திக் (28), பவுன் குமார் (24), சதீஷ்குமார் (34), பூமிநாதன் (24), விஜயகுமார் (29), சுபாஷ் (25), சங்கர் (25), சையத் முகமது இப்ராஹிம் (33) ஆகிய 11 பேரை கைது செய்தனர். இவர்கள் எந்த பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டில் இருந்து தென்மாநிலங்களுக்கு ஹோல் சேல் முறையில் கஞ்சா விற்பனை- 11 பேர் கைது
 
அதேபோல் நேற்று, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டிற்க்கு வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை சோதனை செய்தனர். அப்போது அதில் தனி, தனி ரயில் பெட்டியில் இருந்த சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா 4 பைகளில் இருப்பதை கண்டுப்பிடித்தனர். மேலும் இந்த பைகள் யாருடையது, எங்கு எடுத்து செல்லப்படுகிறது என்பதையும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அடுத்தடுத்த நாட்களில் இருவேறு இடங்களில் 90 கிலோ அளவிற்கான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து தென்மாநிலங்களுக்கு ஹோல் சேல் முறையில் கஞ்சா விற்பனை- 11 பேர் கைது
 
மனிதனை சுய நினைவை இழக்க செய்யும் போதைப்பொருளான கஞ்சா சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்களை மையமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் தொடர்வண்டியை பயன்படுத்தி கஞ்சாவை நகருக்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் சோதனை அதிகரித்து கஞ்சா வியாபாரிகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Complaint: தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
Pakistan Request: அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Complaint: தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
Pakistan Request: அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
அணு ஆயுதம், போர்னு சொல்லி மிரட்டிட்டு இப்ப வந்து கெஞ்சுறீங்க.? - தண்ணீர் திறக்க பாக். கோரிக்கை
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!
TRB TET Exam 2025: டிஆர்பி டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, கட்டணம், ஊதியம்- முழு விவரம்!
TRB TET Exam 2025: டிஆர்பி டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, கட்டணம், ஊதியம்- முழு விவரம்!
ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?
ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?
பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?
பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 13-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 13-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்க தெரியுமா.?
Embed widget