மேலும் அறிய

தேர்தல் முடிந்த பிறகும் மக்களை நோக்கி எம்.எல்.ஏ.. ஆச்சரியத்தில் திருப்போரூர் மக்கள்..!

திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் குரல் கேட்போம் குறை களைவோம் ஒரு மாத கால திட்டம் துவக்கம்.

 மக்கள்  பிரதிநிதிகள் - பொதுவான குற்றச்சாட்டு 

தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்கள் வரவில்லை என பல இடங்களில் குற்றச்சாட்டை முன் வைத்து பொதுமக்கள் வேட்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. தங்கள் குறைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்) நேரில் வந்து குறைகளை கேட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு என தனி பாணியை பின்பற்றி  வருகின்றனர்.


தேர்தல் முடிந்த பிறகும் மக்களை நோக்கி எம்.எல்.ஏ.. ஆச்சரியத்தில் திருப்போரூர் மக்கள்..!

"குரல் கேட்போம் குறை களைவோம்" 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் "குரல் கேட்போம் குறை களைவோம்"  திட்டத்தை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி  தினம் சிறுதாவூர் ஊராட்சியில் துவங்கினார். இதன் மூலம் மே மாதம் இரண்டாம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்த செயல் திட்டத்தின் மூலம், இதன்படி ஒவ்வொரு நாளும் மாலை ஒரு கிராமத்திற்கு சென்று  அங்கு ஒருவர் வீட்டில்  சட்டமன்ற உறுப்பினர் தங்குவார்.

தேர்தல் முடிந்த பிறகும் மக்களை நோக்கி எம்.எல்.ஏ.. ஆச்சரியத்தில் திருப்போரூர் மக்கள்..!
 
 
அடுத்த நாள் காலை 7 மணி அளவில் தொடங்கி  11 மணி வரை  அந்த கிராமத்தை   சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிராம நிலவரம் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து  ஆய்வு மேற்கொள்வார். மக்களின் தேவை என்ன என்பது குறித்தும் அவர்கள் கோரிக்கை குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்வார். இதை வைத்து மானிய கோரிக்கை விவாத கூட்டத்தொடர் நடைபெறும் பொழுது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்பு திருமணங்கள் ஆகியவற்றில் மக்கள் பிரச்னை குறித்து பேச இந்த செயல் திட்டம் உதவி  செய்யும்  என நம்புகிறார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி

ஆய்வை துவங்கிய எம்எல்ஏ

சிறுதாவூர் கிராமத்தில் ஆய்வு செய்தவர், அங்குள்ள அரசு பள்ளி கட்டிடம் குளம் சீரமைப்பு பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவது என ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆமூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளிடம்  கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து காரணை, குன்னப்பட்டு பையனூர் உள்ளிட்ட ஊராட்சிகளை ஆய்வு செய்தார். 84 கிராமத்தையும், மூன்று பேரூராட்சி பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாத காலத்தில் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
 

தேர்தல் முடிந்த பிறகும் மக்களை நோக்கி எம்.எல்.ஏ.. ஆச்சரியத்தில் திருப்போரூர் மக்கள்..!
 
இதுகுறித்து எஸ்.எஸ். பாலாஜி பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் முடிவிற்காக ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேர்தல் நடைவிதி அமலில் உள்ளதால், ஒரு மாதம் தள்ளிப் போவதின் பேரில் ஒரு மாத கால இடைவெளியை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு குரல் கேட்போம் குறை களைவோம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தார். ஒரு மாதத்தில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து  சனிக்கிழமை மாலை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் முன்தினம் மாலை பொழுதே ஊராட்சிக்கு சென்று இரவு தங்கி மறுநாள் காலை 7 மணி முதல் அந்த ஊராட்சியில் ஆய்வு    செய்ய உள்ளேன் .

தேர்தல் முடிந்த பிறகும் மக்களை நோக்கி எம்.எல்.ஏ.. ஆச்சரியத்தில் திருப்போரூர் மக்கள்..!
 
அடுத்த , மூன்று நான்கு ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்வது என்றும் ஆய்வு செய்யும் போது மக்களின் பிரச்சினைகளை மக்களுடைய கோரிக்கைகளை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கருத்தை கேட்டும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வது சம்பந்தமாகவும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிந்து கொண்ட அனைத்து தகவல்களையும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விவாதிக்க ஏதுவாக இத்திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளைTVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Stalin Reply to EPS: “ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
“ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Embed widget