மேலும் அறிய

திருச்சி : விதவிதமாய், வித்தியாசமாய் தோசைகள்.. கலக்கும் திருச்சி ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் பிரபலங்கள் அனைவருக்கும் பிடித்த ஸ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ் பற்றி பார்ப்போம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு முன்பாக இருக்கும் ஸ்ரீ ராகவேந்திரா மடம் அருகிலேயே உள்ளது இந்த ராகவேந்திரா அன்னபூரணி மெஸ். இதை உணவகம் என்று சொல்வதைவிட வீடு என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கு உரிமையாளர்கள் தனது  வீட்டிலேயே உணவகத்தை நடத்தி வருகின்றனர். மேலும் இதனை உணவகம் என்று சொல்லாமல் கோபாலன் வீடு என்று அனைவரும் கூறுகின்றனர் . இந்த உணவகத்தின் உரிமையாளர் கோபாலன் தனது வீட்டிலேயே வீட்டுமுறை உணவை வழங்க வேண்டும் என்பதற்காகவே, ஆரோக்கியமான முறையில் நல்ல உபசரிப்புடன் இந்த உணவகத்தைத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டு கோபால ஐயங்கார் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். அப்போது அவர் தனது வீட்டிலேயே இந்த மெஸ்ஸை நடத்தி வந்தார்.

மேலும் இந்த மெஸ்ஸில் தயாரிக்கும் உணவுகள் அனைத்துமே பல்வேறு பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்ததாக உள்ளது. குறிப்பாக நிழல்கள் ரவி, இயக்குனர் திருமுருகன் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் பலருக்கும் இந்த உணவகம் மிகவும் பிடித்தமானதாகும். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இங்கு தயாரிக்கும் முறுக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகின்றனர். 


திருச்சி : விதவிதமாய், வித்தியாசமாய் தோசைகள்.. கலக்கும் திருச்சி ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்

இந்த உணவகத்தின் உரிமையாளர் கோபாலன் கடந்த வருடம் இறந்து விட்டதையடுத்து, அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த உணவகத்தில் காலையிலிருந்தே முழு சாப்பாடு கிடைக்கிறது. குறிப்பாக சாப்பாடு, குழம்பு, ரசம், கூட்டு , பொரியல் வகைகள் அனைத்துமே காலையிலிருந்து இவர்கள் தயாரிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தோமேயானால்,வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி செல்பவர்கள் ஆகியோருக்காக மதிய உணவு பேக்கிங் செய்து கொடுப்பதற்காக, இதுபோன்று காலையிலேயே தயாரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


திருச்சி : விதவிதமாய், வித்தியாசமாய் தோசைகள்.. கலக்கும் திருச்சி ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்

அதுமட்டுமல்லாமல்,காலையில் கிடைக்கும் காய்கறி வகைகள் பத்து மணிக்கு மேல் கிடைக்காது. ஏனெனில் இவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை புதிதாக கூட்டு, பொரியல் போன்றவற்றை தயார் செய்கின்றனர். இதுவே இவர்களது மிகப்பெரிய சிறப்பு ஆகும். மேலும் இங்கு வருபவர்களையும் அவர்கள் அன்புடன் உபசரிக்கின்றனர். இந்த உணவகத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தோசை வகைகள் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். குறிப்பாக, இங்கு மிளகு நெய் தோசை, தக்காளி மிளகு தோசை, கருவேப்பிலை இஞ்சி சீரகம் கலந்த தோசை என்று வித்தியாசமான முறையில் இவர்கள் தயாரிக்கின்றனர்.


திருச்சி : விதவிதமாய், வித்தியாசமாய் தோசைகள்.. கலக்கும் திருச்சி ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்

மேலும் வீட்டிலேயே அரைத்த மாவு மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மசாலாக்களை மட்டுமே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.  அதைப்போன்று சாதம் வகைகளும் சாம்பார் சாதம், வத்த குழம்பு சாதம் என்று பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. மேலும், இவை அனைத்துமே அவர்கள் அந்த நேரத்தில் தயார் செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக இங்கு அனைத்துமே பிரஷ்ஷாக இருக்கின்றது. எனவே ஸ்ரீரங்கம் சென்று வருபவர்கள் கண்டிப்பாக இந்த மெஸ்க்கு சென்றால் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் பிரஷ்ஷான உணவு கிடைக்கும் என்பது உறுதி. மேலும், இந்த உபசரிப்புக்காகவே இங்கு கூட்டம் அலை மோதுகின்றது. இது போன்ற சிறப்பிற்காகவே இந்த உணவகத்திற்கு செல்லலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ
கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ
வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?
வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?"
அப்புறம் டயட் இருந்தாலும் நோ யூஸ்... சிறுவயதில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் மூளைக்கு ஆபத்தா?அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு
அப்புறம் டயட் இருந்தாலும் நோ யூஸ்... சிறுவயதில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் மூளைக்கு ஆபத்தா?அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு
தூக்கம் வருது.. ஆனா நிம்மதி இல்லையா? நிபுணர்கள் சொல்லும் பகீர் காரணங்கள்!
தூக்கம் வருது.. ஆனா நிம்மதி இல்லையா? நிபுணர்கள் சொல்லும் பகீர் காரணங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Embed widget