மேலும் அறிய

ஏற்கெனவே சமைச்ச எண்ணெயை மறுபடி சமையலில் பயன்படுத்தறீங்களா? உஷார்!

கடையில் வாங்கும் உணவாகட்டும், வீட்டு சமையல் ஆகட்டும், ஏற்கெனவே சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது நமக்கொரு இயல்பான சம்பவம்.

பார்த்த கணமே ஒருவரின் கண்களையும் மனதையும் அலைபாய வைத்து, பசியைத் தூண்டி நாவில் எச்சில் ஊற வைக்கும் உணவுகளில் இந்திய உணவுகள் என்றுமே முதன்மையானவை.

ஆனால் நம் இந்திய உணவுப் பொருள்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சமைக்கப்படுகின்றன என்பதற்கு இந்த அவசர உலகில் நாம்  பெரும்பாலும் முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக எந்த எண்ணெய்யில் நம் உணவுப் பொருள்கள் சமைக்கப்படுகின்றன என்பதை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதே அல்ல.

கடையில் வாங்கும் உணவாகட்டும், வீட்டு சமையல் ஆகட்டும், ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது நமக்கொரு இயல்பான சம்பவம்.

ஏற்கெனவே உணவு பொரித்த எண்ணெயை மீண்டும் சமையலில் பயன்படுத்துவது நமது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும், ஆனால் ஆரோக்கியத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI (Food Safety and Standards Authority of India)), வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, ஏற்கெனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது, உடலில் நச்சு வாயுக்கள் வெளியீட்டை அதிகரிக்கும் என்றும், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கும்படியும், மூன்று முறைக்கு மேல் எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.


ஏற்கெனவே சமைச்ச எண்ணெயை மறுபடி சமையலில் பயன்படுத்தறீங்களா? உஷார்!

இந்நிலையில், ஏற்கெனவே உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் உபயோகிப்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்று பார்க்கலாம்.

சமையலில் ஏற்கெனவே உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் பாதுகாப்புடன் உபயோகிப்பது என்பது நாம் என்ன மாதிரியான உணவுப் பொருளை சமைக்கிறோம், எவ்வளவு சூட்டில் சமைக்கிறோம், எவ்வளவு நேரம் சமைக்கிறோம் என்பனவற்றைப் பொறுத்தே அமையும். எனினும் ஏற்கெனவே உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது கீழ்க்கண்ட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்:

பொரித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதால் அதன் வேதியியல் கலவை (chemical composition) மாறி கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இதனால் வறுத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது உடலில் நச்சுத்தன்மை, கொழுப்புப் படிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

அஜீரணத்தை அதிகரிக்கும்

சமைத்த எண்ணெய்யில் மீண்டும் உணவுப் பொருள்களை சமைத்து உண்பது, அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல், தொண்டை பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்களுக்கு வழக்கத்தை விட அதிக நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகள் இருந்தால், சாலையோரக் கடை உணவுகளையும், ஜங்க் எனப்படும் குப்பை உணவுகளையும் கட்டாயம் தவிருங்கள்.

கொழுப்பு அதிகரிப்பு

சமைத்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும்போது எண்ணெய்யில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. எண்ணெயில் உள்ள சில கொழுப்புகள் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது டிரான்ஸ் கொழுப்புகளாக மாறுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் என்பதால் இருதய நோய் அபாயத்தை இது அதிகரிக்கும். 

புற்றுநோய் அபாயம்

சமைத்த எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது, பாலிசைக்ளிக் அரோனா ஹைட்ரோகார்பன்கள் (PAH) மற்றும் ஆல்டிஹைடுகள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களின் இருப்பை உடலில் அதிகரிக்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்கப்பதைத் தவிர்ப்போம்.

தலைப்பு செய்திகள்

தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
கும்பகோணம் கடப்பா: சோழநாட்டின் பாரம்பரிய சுவை மற்றும் தயாரிக்கும் முறை!
கும்பகோணம் கடப்பா: சோழநாட்டின் பாரம்பரிய சுவை மற்றும் தயாரிக்கும் முறை!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget