மேலும் அறிய

Health: சர்க்கரை நோயால் சரும வியாதி வருமா? இந்த அறிகுறிகள் தென்பட்டால் உஷார்..!

பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 

இந்தியாவில் பாதிப்பு:

இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாமல் இருப்பது ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் வந்தால் கூடவே சரும வியாதிகளும் வரலாம்.  நீரிழிவு நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும், அதனால் ஏற்படும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதையும் காணலாம்.

அதற்கான அறிகுறிகள் இதோ..

1. சருமத்தில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிற பேட்ச்கள்

சரும பாதிப்பு சிறிதாகவே ஆரம்பிக்கும். முதலில் சிறு கட்டிகளாக உருவாகும். பின்னர் இவை தடிப்புகளாக மாறும். இது மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் தடிப்புகள் உண்டாகும். டைப் 2 டயபெட்டீஸ் உள்ள பல்ருக்கும் இந்த வகை சரும பாதிப்பு ஏற்படுவது இயல்பு.

2. தோல் தடித்தல்

கால்விரல்கள், கைவிரல்களில் தோல் தடிக்கும்.  இதனை டிஜிட்டல் ஸ்க்லராஸிஸ் எனக் கூறுகிறார்கள். கைகளில் இறுக்கம், மினுமினுப்பு ஏற்படும். விரல்கள் இறுக்கமாகும். அதை அசைப்பது கடினமாகும். பல ஆண்டுகளாக சர்க்கரை நோயை மோசமாகப் பராமரித்தால் இவ்வாறு நடக்கும். முதுகு, தோள்பட்டை, கழுத்துப் பகுதியிலும் இதுபோன்ற தோல் தடித்தல் ஏற்படும்.

3. புண்கள் ஆறுவது தாமதமாதல்

சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் செல்லும்போது புண்கள் ஆராமல் போகும். சர்க்கரை நோயினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ரத்த ஓட்டம் குறையும். தொற்றுகள் ஏற்படும். அதனால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம்.

4. கொப்புளங்கள்

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு மூட்டுக்களில், கை மற்றும் கால் விரல்களில் கொப்புளங்கள் தோன்றும்.பெரும்பாலான கொப்புளங்கள் வலியில்லாதவையாக இருக்கும்.  இவை தவிர டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறியாக விடிலிகோ ஏற்படுகிறது என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தோலில் நிறத்தை அளிக்கும் செல்கள் சேதமடைந்து வெண்ணிற திட்டுக்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக, itching என்று கூறப்படும் அரிப்பு மிக மிக பொதுவான பிரச்சனை தான், பல நேரங்களில் இது ஒரு பிரச்சனை கூட இல்லை; இருந்தாலும், ஆரம்ப கால நீரிழிவு அறிகுறியாக, அரிப்பு மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அதிக அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

நீரிழிவு நோயின் அறிகுறி என்று ஆணித்தரமாக உறுதி செய்வது காலில் ஏற்படும் புண். நீரிழிவு நோயால் கால் நரம்பு சேதமடையும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். சிறிய புண் அல்லது கீறல் ஏற்பட்டால் கூட, ஆறாமல் அப்படியே இருக்கும்.

எனவே சர்க்கரையை கட்டுக்குள் வையுங்கள் சந்தோஷமாக இருங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து  த்ரில் வெற்றி
Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Embed widget