மேலும் அறிய

பட்டதாரிகளா? 20,000 ரூபாயில் தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க ஜனவரி 4 கடைசி தேதி..

தனியார் நிறுவனம், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்,அவர்களுக்கு உதவும் வகையில், “ஓன் ஸ்டாப் சென்டர்“ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வருகின்ற ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதனைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனம், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உதவும் வகையில், “ஓன் ஸ்டாப் சென்டர்“ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உதவிக்கேட்டு வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குதற்கு ஆலோசகர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே சமூக பணியியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதிகள் தேவை? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பட்டதாரிகளா? 20,000 ரூபாயில் தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க ஜனவரி 4 கடைசி தேதி..

சமூக நலத்துறை பணியிடங்களுக்கான விபரங்கள்

பணியிடம்- திருநெல்வேலி சமூக நலத்துறை

காலிப்பணியிடங்களின் விபரங்கள்

மூத்த ஆலோசகர் – 1

வழக்கு பணியாளர் – 4

பல்நோக்கு உதவியாளர் – 2

இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் – 1 என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

இதோடு சமூக பணியியல் துறையில் இளநிலை, முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தால், https://tirunelveli.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சுய விபரங்கள், கல்வித்தகுதி அனைத்தையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,

பி4/107, சுப்பிரமணியம் தெரு,

வ.உ.சி மைதானம் எதிரில்,

திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை

திருநெல்வேலி – 627 002.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும், அதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம் :

மூத்த ஆலோகர் – மாதம் ரூ.20,000/-

வழக்கு பணியாளர் – மாதம் ரூ. 15,000/-

பல்நோக்கு உதவியாளர் – மாதம் ரூ. 6,400/-

இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் – ரூ.10,000/-

மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf   என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்

தலைப்பு செய்திகள்

அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?
500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?
விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு
விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget