மேலும் அறிய

இளைஞர்களே இதான் சான்ஸ் : 8,000 -க்கும் மேல் உதவித்தொகை..! ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் டிசம்பர் 8 -ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் முன்னேறுவதற்காக, தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (National Apprenticeship Promotion Scheme), மாபெரும் தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship) சேர்க்கை முகாம் ஒன்று நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்

இந்தச் சிறப்புச் சேர்க்கை முகாம் வருகிற டிசம்பர் 8, 2025 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

நேரம் : காலை 9.00 மணி 

இடம் : ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மயிலாடுதுறை மாவட்டம்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான இளைஞர்களைத் தொழிற்பழகுநர் பயிற்சிக்காகத் தேர்வு செய்ய உள்ளனர்.

முக்கியமாகப் பங்கேற்கும் நிறுவனங்கள்

* தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)

* ஆவின் (Aavin) உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME Sector) இந்த நிறுவனங்கள், ஐ.டி.ஐ. (ITI) பயிற்சி முடித்தவர்களை அவர்களின் பயிற்சிப் பிரிவுகளுக்கு ஏற்பத் தேர்வு செய்ய இருக்கின்றனர்.

கல்வித் தகுதிகள் மற்றும் பயிற்சி விவரங்கள்

தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு இரண்டு வகையான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்கள்:

ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

2. புதிய தொழிற்பழகுநர்கள் (Fresher Apprentices):

ஐ.டி.ஐ. பயிற்சி முடிக்காத, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடைய இளைஞர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய தொழிற்பழகுநர்களாக (Fresher Apprentice) சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்குப் பின்வரும் கால அவகாசத்தில் பயிற்சி அளிக்கப்படும்

* அடிப்படைப் பயிற்சி: 3 முதல் 6 மாத காலம்.

* தொழிற்பழகுநர் பயிற்சி: அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை.

இந்த முழுமையான பயிற்சிக்குப் பிறகு, அவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate - NAC) வழங்கப்படும்.

உதவித்தொகை மற்றும் பலன்கள்

* உதவித்தொகை: தொழிற்பழகுநர் பயிற்சியின்போது, நிறுவனம் சார்பில் உதவித்தொகையாக ₹8,000/- முதல் வழங்கப்படும்.

* வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறுவதன் மூலமாக, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* பணி வாய்ப்புகள்: இச்சான்றிதழ் இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். இது இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கும் எதிர்கால வேலைவாய்ப்புக்கும் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

தொடர்புக்கு

இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முகாம் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி குறித்து மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழ்க்கண்ட அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

உதவி இயக்குநர்,

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,

தஞ்சாவூர், மயிலாடுதுறை (பொறுப்பு).

தொலைபேசி எண்: 9499055725

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Embed widget