சமூக நலத்துறையில் வேலை வாய்ப்புங்க... கடைசி தேதிக்கு இன்னும் 3 நாளே இருக்கு!!!
மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிச்சு இருக்காங்க. 3 பணியிடங்கள் இருக்கு.

சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிச்சு இருக்காங்க. 10-ம் வகுப்பு தகுதி. கடைசி தேதி வரும் 31ம் தேதி. அதனால உடனே விண்ணப்பிங்க.
மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிச்சு இருக்காங்க. 3 பணியிடங்கள் இருக்கு. இதற்கு 10 ஆம் வகுப்பு, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை பற்றி முழு விபரம் இதோ.
மதுரை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பல்நோக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம். நன்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2025/07/17532671777163.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020, விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.





















