ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்களா நீங்கள்...? - உங்களுக்கான அருமையான வேலை வாய்ப்பு!!!
ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் காலியாக உள்ள ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் காலியாக உள்ள ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் வழியாக தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் கீழ் மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகளின் கீழ் இப்பதவிக்கு ஆட்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். இப்பதவிக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பார்ப்போம் வாங்க.
உதவி மருத்துவ அதிகாரி (ஆயுர்வேதம்) 8
இப்பணியிடங்கள் பொதுப் பிரிவில் - 1, பிசி - 1, பிசிஎம் - 1, எம்பிசி - 1, பெண்களுக்கான ஒதுக்கீட்டில் - 1, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு - 2, நிரப்பப்படாத பணியிடம் - 1 என மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது.
ஆயுர்வேத பிரிவில் உள்ள உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது இதர பல்கலைக்கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேதத்தில் HPIM அல்லது GCIM அலல்து L.I.M அல்லது B.A.M.S ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் இந்திய மருத்துவத்திற்கான இந்திய வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பதவிக்கு நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்கள் தமிழ் மொழி தகுதியுடன் கூடிய கணினி வழி எழுத்துத் தேர்வை எழுத வேண்டும்.
தமிழ் மொழி தாள் 10-வகுப்பு தரத்தில் நடைபெறும். மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். இது தகுதித் தாள் மட்டுமே. மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துகொள்ளப்படாது.
பதவிக்கான ஆயுர்வேதத்தை முதன்மையாக கொண்ட தேர்வு கணினி வழியில் நடைபெறும். இது 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
தேர்வு தாள் ஆங்கிலத்தில் மட்டுமே அமையும். நெகட்டிவ் மார்க் கிடையாது. இதற்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். அதில் தகுதி பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் டிஏபி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழியாக முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இமெயில் முகவரி அளிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.





















