மேலும் அறிய

Neighbourhood Watch: ஈஸ்டர் தாக்குதல் டூ பொருளாதார நெருக்கடி வரை - இலங்கையில் நடந்தது என்ன? அடுத்து என்ன?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இலங்கை நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி அச்சுறுத்தி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்படி உருவானது? தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள விக்ரமசிங்க செய்ய வேண்டியது என்ன?

ஈஸ்டர் தாக்குதல் டூ பொருளாதார நெருக்கடி வரை:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி திடீரென்று தொடங்கியதல்ல. இது பல மாதங்களாக தொடர்ந்து வந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதன்காரணமாக அப்போது முதல் அங்கு சுற்றுலா மிகவும் தடைப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததன் காரணமாக அந்நிய செலாவணி அங்கு மிகவும் குறைந்தது. அத்துடன் அங்கு பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது.  இது இலங்கை பொருளாதாரத்தில் விழுந்த முதல் அடி. 

இதைத் தொடர்ந்து இலங்கை அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்தது. அதில் ரசாயனம் மற்றும் உரம் ஆகியவற்றின் இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்தது. அதாவது இயற்கை வேளாண்மையை அதிகரிக்க இலங்கை அரசு இந்த முடிவை எடுத்தது. இதன்காரணமாக 6 மாதங்களில் அங்கு பயிர்களின் உற்பத்தி மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. குறிப்பாக இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் தேயிலை பயிர்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கியது. 


Neighbourhood Watch: ஈஸ்டர் தாக்குதல் டூ பொருளாதார நெருக்கடி வரை - இலங்கையில் நடந்தது என்ன? அடுத்து என்ன?

இந்த சிக்கல்களை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அடுத்த அடி விழுந்தது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. கொரோனா காரணமாக மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை போல் இலங்கையின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. உணவு, எரிப்பொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்தது. இந்த விலைவாசி உயர்விற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி ஒரு காரணம் என்று கருதி மக்கள் போராடத்தில் குதித்தனர்.  அது பெரிய மக்கள் போராட்டமாக மாறியது. அதிபர் மாளிகை முதல் அனைத்து அமைச்சர்களின் இல்லங்களும் முற்றுகையிட்டு சூறையாடப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க செய்ய வேண்டியது என்ன?

தற்போது இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கை நாடு தற்போது வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளது. மேலும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டாலர் கடனை கேட்டுள்ளது. அது கிடைப்பதில் தற்போது தாமதம் நிலவி வருகிறது. 

அத்துடன் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடும் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது. இதையும் சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு அதிபர் விக்ரமசிங்கவிற்கு உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியுடன் ரணில் விக்ரமசிங்க மக்களின் அதிருப்தியையும் சேர்ந்து சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். ஆகவே இது அவருக்கு சற்று சவாலான சூழல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் சுமித் பாண்டே. இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget