மேலும் அறிய

MOH to State govt.: ’மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!’ - மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்..!

இந்தியாவின் இரண்டாம் அலை கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் சராசரியும் குறைந்து வருகிறது. - மத்திய சுகாதாரத்துறை

மருத்துவச்  சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான மறு ஆய்வை மேற்கொள்ளச் சொல்லி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இன்றைய கொரோனா தொற்றுச்சூழல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். 

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக விளக்கிய அவர், இந்தியாவின் இரண்டாம் அலை கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் சராசரியும் குறைந்து வருகிறது. இது கடந்த வாரத்தில் மட்டும் 30 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது. அதிக கொரோனா பாதிப்புப் புகார்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 7 மே 2021 அன்று உச்சத்தைத் தொட்ட நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதன்பிறகு கணிசமாகக் குறைந்து வருகிறது. இது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது.  3 மே 2021-க்கு பிறகான கொரொனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 81.8 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பு பரிசோதனையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனக் குறிப்பிட்டார். 

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகம், ‘வைரஸ் பரவுதலும் கணிசமாகக் குறைந்துள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் பாதிக்கப்படும் இடங்களில் அங்கிருந்து பரவாமல் தடுக்கப்பட வேண்டும். 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் வகையில் இருப்பதால் பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதைக் கடுமையாகப் பின்பற்றுவதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என கொரோனா தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் வயதுவாரியான கொரோனா பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனா முதல் அலைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலைக்காலத்தில் 31-40 வயதுடையவர்களிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முதல் அலைக்காலத்தில் 21.23 சதவிகிதம் பேரும் அதுவே இரண்டாம் அலைக்காலத்தில் 22.70 சதவிகிதம் பேரும் 31-40 வயதுடையவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதுவரை மருத்துவப் பணியாளர்களுக்கு 1.70 கோடி டோஸ்களும்  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 17.24 கோடி டோஸ்களும் முன்களப்பணியாளர்களுக்கு 2.58 கோடி டோஸ்களும் 18-44 வயதுடையவர்களுக்கு 4.53 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 26.05 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக கொரோனா மூன்றாவது அலை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் வி.கே.பால், அடுத்தடுத்த கொரோனா பாதிப்பு காலங்களில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்.  இதுதொடர்பான விழிப்புணர்வை பிள்ளைகளிடமும் குடும்பங்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்’ எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget