மேலும் அறிய

MOH to State govt.: ’மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!’ - மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்..!

இந்தியாவின் இரண்டாம் அலை கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் சராசரியும் குறைந்து வருகிறது. - மத்திய சுகாதாரத்துறை

மருத்துவச்  சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான மறு ஆய்வை மேற்கொள்ளச் சொல்லி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இன்றைய கொரோனா தொற்றுச்சூழல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். 

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக விளக்கிய அவர், இந்தியாவின் இரண்டாம் அலை கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் சராசரியும் குறைந்து வருகிறது. இது கடந்த வாரத்தில் மட்டும் 30 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது. அதிக கொரோனா பாதிப்புப் புகார்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 7 மே 2021 அன்று உச்சத்தைத் தொட்ட நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதன்பிறகு கணிசமாகக் குறைந்து வருகிறது. இது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது.  3 மே 2021-க்கு பிறகான கொரொனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 81.8 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பு பரிசோதனையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனக் குறிப்பிட்டார். 

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகம், ‘வைரஸ் பரவுதலும் கணிசமாகக் குறைந்துள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் பாதிக்கப்படும் இடங்களில் அங்கிருந்து பரவாமல் தடுக்கப்பட வேண்டும். 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் வகையில் இருப்பதால் பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதைக் கடுமையாகப் பின்பற்றுவதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என கொரோனா தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் வயதுவாரியான கொரோனா பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனா முதல் அலைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலைக்காலத்தில் 31-40 வயதுடையவர்களிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முதல் அலைக்காலத்தில் 21.23 சதவிகிதம் பேரும் அதுவே இரண்டாம் அலைக்காலத்தில் 22.70 சதவிகிதம் பேரும் 31-40 வயதுடையவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதுவரை மருத்துவப் பணியாளர்களுக்கு 1.70 கோடி டோஸ்களும்  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 17.24 கோடி டோஸ்களும் முன்களப்பணியாளர்களுக்கு 2.58 கோடி டோஸ்களும் 18-44 வயதுடையவர்களுக்கு 4.53 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 26.05 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக கொரோனா மூன்றாவது அலை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் வி.கே.பால், அடுத்தடுத்த கொரோனா பாதிப்பு காலங்களில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்.  இதுதொடர்பான விழிப்புணர்வை பிள்ளைகளிடமும் குடும்பங்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்’ எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Embed widget