மேலும் அறிய

‛கொரோனா பாதித்த மாநிலம் உபி...’ - கொரோனா மாநிலமாக அறிவித்தார் ஆதித்யநாத்!

ஏற்கெனவே கடந்த டிசம்பர் 25 தொடங்கி அந்த மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கு  நிலையில் ஓமைக்ரான் அச்சத்தைக் கருத்தில் கொண்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அந்த மாநில முதலமைச்சர் யோகி அதித்யநாத் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த அறிவிப்பு வருகின்ற மார்ச் 31 2022 வரை அமலில் இருக்கும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 27ந் தேதி நிலவரப்படி மட்டும் அங்கே ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் ஒரே நேரத்தில் குணமடைந்ததாக அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 27 ந்தேதி அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த கொரோனா பாதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலப் பொதுச் சுகாதாரச் சட்டம் பிரிவு 3ந் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் 25 தொடங்கி அந்த மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கு  நிலையில் ஓமைக்ரான் அச்சத்தைக் கருத்தில் கொண்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


‛கொரோனா பாதித்த மாநிலம் உபி...’ - கொரோனா மாநிலமாக அறிவித்தார் ஆதித்யநாத்!

கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வந்த உலகம் தற்போது ஒமிக்ரானின் பிடியில் சிக்க ஆரம்பித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த சூழலில் ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் 167 பேருக்கும், டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், தெலங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும்,  தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், ஹரியானாவில் 4 பேருக்கும், உத்தரகாண்ட்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும்,  மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரை 61 பேரும், டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 165 பேரில் 23 பேரும் குணமடைந்துள்ளனர்.


‛கொரோனா பாதித்த மாநிலம் உபி...’ - கொரோனா மாநிலமாக அறிவித்தார் ஆதித்யநாத்!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஒமிக்ரான் தொற்றால் மீண்டும் முழு நேரம் லாக்டவுன் போடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதேசமயம், வெளிநாட்டிலிருந்து வருபவர்களால்தான் ஒமிக்ரான் அதிகளவு பரவுகிறது என்ற கருத்து ஒன்று நிலவுவதால் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Embed widget