மேலும் அறிய

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5.24 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்...!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அலை பரவலின்போது செப்டம்பர் மாதத்திலும் இரண்டாம் அலை பரவலின்போது கடந்த மே மாதத்திலும் தொற்று பரவல் விகிதமானது மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கையால் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது.
 
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5.24 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்...!
 
தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தினசரி பாதிப்பு 25 நபர்களுக்கு கீழ் இருந்து வருகிறது. நேற்று வரை கொரோனா தொற்றுக்கு மொத்தம் 26,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் 233 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இதுவரை 240 பேர் உயிரிழந்துள்ளதாக நிலையில், தினசரி உயிரிழப்பு என்பது கடந்த ஒரு வாரமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5.24 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்...!
 
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப் புறங்களில் இருக்கும் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து கொரோன வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
 
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5.24 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்...!
 
இதனால் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அனைவரும், கட்டாயமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மூன்றாவது அலை பாதிப்பிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று முதல் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் முன் களப் பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்புசி செலுத்தி கொள்ள முன் வரவேண்டும். கொரோனா தடுப்பு வழி முறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget