Karthigai Deepam Serial: ஷாக்கான மீனாட்சி! சந்தேகப்பட்ட சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எம்டியாக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்தியைப் பார்த்து அதிர்ந்த சாமுண்டீஸ்வரி:
அதாவது, சாமுண்டீஸ்வரி ஆஸ்பிட்டலில் இருக்க இங்கே மீனாட்சி கார்த்தியை பார்த்ததும் அனைவரும் ஷாக்காகின்றனர். ரேவதி உங்களுக்கு ஏற்கனவே இவரை தெரியுமா? என்று கேட்க மீனாட்சி இல்லை என்று சொல்ல எல்லோரும் நிம்மதி அடைகின்றனர்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி சூரியகலாவுக்கு போன் செய்ய அவளும் ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல, சந்தேகமடைந்து வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்கிறாள். மயில்வாகனம் எவ்வளவு தடுக்க முயற்சி செய்தும் சாமுண்டீஸ்வரி கிளம்பி வருகிறாள்.
வரும் வழியிலும் மயில்வாகனம் நேரத்தை கடத்த ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி ஆட்டோவில் வெளியேறி வீட்டுக்கு வருகிறாள். இதற்கு இடையே மயில் வாகனம் கார்த்திக்கு தகவல் கொடுக்க அவன் வீட்டிலிருந்து கிளம்பி செல்ல சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் நுழைகிறாள்.
சாமுண்டீஸ்வரிக்கு சந்தேகம்:
உங்க எம்டி வந்து போயிட்டாரா என்று கேட்க, ரேவதி போயிட்டாரு என சொல்கிறாள். அவரை இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா? என்று கேட்க எல்லோரும் ஒரே மாதிரியாக இல்லை என சொல்கின்றனர். மொத்த குடும்பமும் சேர்ந்து உண்மையை மறைத்ததாக சாமுண்டீஸ்வரி சந்தேகம் அடைகிறாள்.
இதனால் வீட்டில் வேலை செய்யும் மீனாட்சியை அழைத்து இதுக்கு முன்னாடி ரேவதி எம்.டி-யை பார்த்து இருக்கியா? என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















