![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
![Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனா? Thalaivar 170: Arvind Swami to reunite with Rajinikanth in Thalaivar 170 after 31 Years Thalapathy Movie Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/05/3decaa9fb06f67e88b8604b182d452bb1662381243262501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைவர் 170:
கோலமாவு கோகிலா, டாக்டர் , பீஸ்ட் ஆகிய படங்களை எடுத்து கோலிவுட்டில் ரசிகர் கூட்டத்தை பிடித்தவர் நெல்சன். இவர் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெய்லர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
View this post on Instagram
‘பிஸ்ட்’ படத்தில் முன்னனி நடிகரான விஜய்யை வைத்து படம் இயக்கினார் இயக்குனர் நெல்சன். இதையடுத்து, ரஜினியை வைத்து இவர் படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியனாது. பீஸ்ட் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரசிகர்களின் ‘நெகடிவ்’ விமர்சனங்களை சந்தித்தார். இதனால் ரஜினியின் 169-வது படத்தை இவர் இயக்குவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இதையடுத்து, ரஜினியுடன் நெல்சன் இணைவது உறுதி செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெய்லர் படத்தில் மும்முரமாக நடித்து வரும் ரஜினி அடுத்து ‘சிபி சக்கரவர்த்தியுடன் இணைவதாக கூறப்படுகிறது. ‘டான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்துவிட்டார். அது மட்டுமன்றி, ரஜினியின் 170-வது படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
அரவிந்த் சாமி வில்லனா?
‘தளபதி’ படத்தில் ரஜினியின் தம்பியாக அறிமுகமாகி, ரோஜா படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்குள் ‘என்ட்ரீ’ கொடுத்தவர் அரவிந்த் சாமி. அதன் பிறகு, பம்பாய், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து அன்றைய இளம் பெண்களுக்கு கணவுக் கண்ணன் ஆனார் அரவிந்த். அதன் பிறகு சினிமாவில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த இவர், தனி ஒருவன் படம் மூலம் வில்லனாக நடித்து ரீ-என்ட்ரீ கொடுத்தார். எப்போதும் போல் சார்மிங் ஹீரோவாக இல்லாமல் ஸ்மார்ட் வில்லனாக நடித்த இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. நடிகர் ஜெயம் ரவியுடன் ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரீ ஒத்துப்போகவே, தொடர்ந்து அவருடன் போகன் படத்திலும் இணைந்து நடித்தார்.
தற்போது சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திலும் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி படத்திற்கு பிறகு, 31 வருடம் கழித்து ரஜினியும் அரவிந்த் சாமியும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் மேலும் கூடி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)