Karthigai Deepam: வளையலை கழட்டிய கார்த்திக்! கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கிற்கு சாமுண்டீஸ்வரி சவால் விட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்திகேயன் ரேவதிக்கு கல்யாணத்தை நடத்திக் காற்றின் சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சாமுண்டீஸ்வரி சவால் விட கார்த்திக் உங்களால் முடிந்ததா நீங்க பண்ணுங்க? இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கலாம்? என அவனும் பதிலுக்கு சவால் விடுகிறான்.
வளையலை கழட்டிய கார்த்திக்:
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு வளையல் போட்டு விட வேண்டும். அதற்கு கையில் இருக்கும் பழைய வளையலை கழட்ட வேண்டும் என்று சொல்லி, கழட்ட முயற்சிக்க முடியாமல் போகிறது. இதனால் மருதுவும் கழட்ட முயற்சி செய்ய முடியாமல் போகிறது.
இறுதியாக கார்த்திக் முயற்சி செய்து ரேவதி கையில் இருந்து வளையலை காட்டுகிறான். இதைப் பார்த்து சாமுண்டீஸ்வரி கடுப்பாகிறாள். அதன் பிறகு ரேவதிக்கு புது புடவையை கொடுக்க கார்த்தியும் அவனது பங்குக்கு ஒரு புடவையை கொடுக்கிறான்.
கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி:
ரேவதி எந்த புடவையை கட்டுவது என தெரியாமல் குழம்ப சாமுண்டீஸ்வரி தான் கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு வரும்படி அனுப்பி வைக்கிறாள். புடவை கட்ட போன சமயத்தில் கரண்ட் கட்டாக மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்க அந்த மெழுகுவத்தி புடவையின் மீது பட்டு தீப்பற்றி எறிய கார்த்தி வாங்கி கொடுத்த புடவையை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இது சாமுண்டீஸ்வரிக்கு மேலும் கடுப்பை அதிகரிக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















