Karthigai Deepam: ஏத்திவிடும் சந்திரகலா.. அமைச்சருக்காக ஓகே சொன்ன சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி வீட்டில் சுமங்கலி பூஜை நடத்த அமைச்சர் ஆர்வம் காட்டும் நிலையில், சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் ஜோசியர் அமைச்சரிடம் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியை ஏற்றிவிடும் சந்திரகலா:
அதாவது, அமைச்சர் நான் வேற ஊர்ல இல்ல, இங்கே எப்படி சுமங்கலி பூஜை செய்வது என்று யோசிக்க ரேவதி நீங்க வேணா எங்க வீட்டில் பூஜை பண்ணிக்கோங்க என்று சொல்கிறாள்.
இதை கேட்ட சந்திரகலா கார்த்தியும், ரேவதியும் அவங்க நினைக்கிறதெல்லாம் அமைச்சரை வச்சி நிறைவேற்றிக்கிறாங்க, அதனால் நீ இதுக்கெல்லாம் சம்மதம் சொல்லாத என்று ஏற்றி விடுகிறாள்.
சம்மதம் சொன்ன சாமுண்டீஸ்வரி:
ஆனால் அமைச்சரே நேராக சாமுண்டீஸ்வரியிடம் இதுகுறித்து கேட்க மறுக்க முடியாமல் அவள் சம்மதம் சொல்கிறாள். அதன் பிறகு வீட்டில் சுமங்கலி பூஜைக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.
தொடர்ந்து அடுத்த நாள் அமைச்சர் வீட்டிற்கு வர, பாட்டு பாடி பூஜை செய்து சுமங்கலி பூஜை நல்லபடியாக நடந்து முடிகிறது. இதையெல்லாம் பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள்.
இதையடுத்து ஜாக் மொட்டை மாடியில் உடைந்த செங்கல் கற்களை போட்டு வைத்து அதை உடைத்து போல் நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















