மேலும் அறிய

Baakiyalakshmi serial June 28th : பாண்டிச்சேரிக்கு கிளப்பும் பாக்கியா ராதிகா... செழியன் செய்த சத்தியம்... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று 

சமையல் ஆர்டருக்காக பாண்டிச்சேரி செல்ல தயாராகும் பாக்கியா ஒருபக்கம் அதே கல்யாணத்திற்காக செல்லும் ராதிகாவும் கோபியும் மறுப்பக்கம். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட். 

விஜய் டிவி ரசிகர்களின் அபிமான சீரியல்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. மிகவும் கலகலப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நேற்று மாலினி, செழியனிடம் தனது விருப்பத்தை சொல்ல, ஷாக்கான செழியன் இதெல்லாம் சரியில்ல என்கிறான். மாலினி அதற்காக நான் உங்களை ஜெனியை விட்டுட்டு வர சொல்லவில்லை. எனக்கு உங்களை பிடித்திருக்கிறது ஐ லைக் யூ என்கிறார்கள். அளவுக்கு அதிகமாக குடித்த செழியன் ஸ்டெடியாக நிற்க கூட முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வந்து விடுகிறான். 

 

Baakiyalakshmi serial June 28th : பாண்டிச்சேரிக்கு கிளப்பும் பாக்கியா ராதிகா... செழியன் செய்த சத்தியம்... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று 

ராதிகாவும் மயூவும் ரூமில் இருக்கும் போது ராதிகாவின் அம்மா போன் மூலம் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் திருமணம் பற்றி ஞாபக படுத்துகிறார். கோபி வந்ததும் அவரிடம் உறவுகாரங்க திருமணத்துக்காக மூணு நாள் பாண்டிச்சேரி போகணும். திருமணத்தை ரொம்ப கிராண்டா பண்ணறாங்க என்கிறாள். நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க என கோபி சொல்ல ராதிகா இல்ல நீங்க வாங்க என சொல்ல மறுக்கமுடியாமல் ஒத்துக்கொள்கிறார் கோபி.

பாக்கியா எழில் மற்றும் இனியாவிடம் பாண்டிச்சேரிக்கு சமையல் ஆர்டருக்காக போவது பற்றி சொல்கிறாள். நாங்கள் அனைவரும் இனியாவை பத்திரமாக பார்த்து கொள்கிறோம் நீ தைரியமா போயிட்டு வா என தாத்தா சொல்கிறார். எழில் மிகவும் சந்தோஷப்படுகிறான். எனக்கும் சந்தோஷம் தான் மா ஆனால் எக்ஸாம் சமயத்தில் நீ என்னுடன் இல்லாதது தான் வருத்தமாக இருக்கிறது என்கிறாள் இனியா. பாக்கியாவும் நான் இரண்டு விஷயத்தை நினைத்து தான் கவலைப்பட்டேன். ஒன்று இவ்வளவு பெரிய ஆர்டரை என்னால் செய்ய முடியுமா என்பது மற்றொன்று எக்ஸாம் சமயத்தில் உன்னுடன் இல்லாமல் வெளியில் போவது. இது தான் என் கவலையாக இருந்தது என்கிறாள் பாக்கியா.   அம்மா நீ டெய்லி எனக்கு கால் பண்ணி ஆல் தி பெஸ்ட் சொல்லு அது போதும் என்கிறாள் இனியா.  

 

Baakiyalakshmi serial June 28th : பாண்டிச்சேரிக்கு கிளப்பும் பாக்கியா ராதிகா... செழியன் செய்த சத்தியம்... பாக்கியலட்சுமி சீரியலில் இன்று 

இரவு அனைவரும் தூங்கிய பிறகு செழியன் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கதவை தட்டியதும் பாக்கியா கதவை திறக்க செழியன் மீண்டும் குடித்துவிட்டு வந்ததை பார்த்து ஷாக்காகிறார். ஏன் இப்படி தினமும் குடித்துவிட்டு வருகிறாய். நேற்று தானே இனி நீ குடிக்க கூடாது என சொன்னேன். பாக்கியா செழியனை திட்ட மனசு தாங்காமல் அம்மாவை கட்டிப்பிடித்து அழுத விடுகிறான். எங்களிடம் இருந்து ஏதாவது நீ மறைக்கிறாயா என செழியனிடம் கேட்கிறாள் பாக்கியா. இனிமேல் நீ குடிக்க கூடாது என சத்தியம் வாங்கி கொள்கிறாள்.

அடுத்த நாள் காலையில் ராதிகாவும் கோபியும் ஒரு பக்கம் பாண்டிச்சேரி கிளம்ப, மயூவை பாட்டியுடன் தங்க சொல்லி அழைத்து செல்கிறார்கள். ஈஸ்வரி சாமிக்கு பூஜை செய்துவிட்டு பாக்கியாவை ஆசீர்வாதம் செய்கிறார். பாக்கியாவும் பாண்டிச்சேரி செல்ல தயாராக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget