தண்ணீர் டேங்கிற்குள் பாவை.. இசையை பற்றி அயலி கண்டுபிடித்த உண்மை - அயலி பாரிஜாதம் சங்கமத்தில் இன்று
அயலி பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் மற்றும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அயலி ஆகிய சீரியல்கள் மஹா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.
அயலியைப் பிடித்த சிவா:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எண்ணெய்யில் கால் வைத்து அயலி வழுக்கி விழுவாள் சிவா தாங்கி பிடிக்கலாம் என்று காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தண்ணீர் டேங்கில் பாவை:
அதாவது, பிறகு குழந்தைகள் கண்ணாமூச்சி ஆடலாம் என்று சொல்லி கூப்பிட இவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அயலி வழுக்கி விழ சிவா அவளை தாங்கிப் பிடிக்கிறான். அதன் பிறகு பாவை எங்கே ஒளிவது என தெரியாமல் தண்ணீர் டேங்குக்குள் ஒளிய சிவா தெரியாமல் மோட்டார் போட்டு விடுகிறான்.
தண்ணீரின் அளவு ஏறிக் கொண்டே இருக்க, பாவையின் காதில் இருந்த கம்மல் அவிழ்ந்து தண்ணீர் வழியாக வெளியே வருகிறது. இங்கே இந்திராணி மயங்கி விட குழாயிலிருந்து தண்ணீர் பிடிக்கும் போது கம்பல் வருவதை அயலி கவனித்து டேங்கில் இருந்து பாவையை காப்பாற்றுகிறாள். இசை காது கேட்டு இருந்தா குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என வருத்தப்படுகிறாள்.
அயலிக்கு தெரிந்த உண்மை:
பிறகு ஒரு பொருள் கீழே விழுவது கூட தெரியாமல் இசை கடந்து செல்ல, இதை பார்த்த அயலிக்கு இசைக்கு காது கேட்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு இசையிடம் இது குறித்து விசாரிக்க அவள் நடந்த அனைத்தையும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் மற்றும் அயலி சீரியல்களின் மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























