மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: கைது செய்யப்பட்ட செந்தில் குடும்பம்...வெளியே கொண்டு வர அமுதா எடுத்த முடிவு

திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதனையடுத்து அமுதாவின் தங்கை உமா கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னலட்சுமி உட்பட மொத்த குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்கின்றனர்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி உட்பட மொத்த குடும்பத்தினரையும் அமுதா வெளியே கொண்டு வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. 

திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதனையடுத்து அமுதாவின் தங்கை உமா கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னலட்சுமி உட்பட மொத்த குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்கின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்படும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் வர அமுதா அவரிடம் நான் தான் அந்த பொண்ணு நானே சொல்றேன் அவங்க என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணல. இதுக்கப்புறம் என்ன வேணும் உடனே அவங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ண வேண்டும் என தீக்குளிக்க போவதாக சொல்கிறாள். இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அமுதாவின் முயற்சியை தடுக்கின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

உடனே மாஜிஸ்ட்ரேட் போலீசிடம் கல்யாணம் பண்ண பொண்ணு மாப்பிள்ளை வீட்டு மேல எந்த தப்பும் இல்லேன்னு சொல்றாங்க, அப்புறம் ஏன் யோசிச்சிகிட்டு எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க என உத்தரவு போடுகிறார். ,மேலும் லவ் மேரேஜ் பண்ணா பொண்ணு வீட்டுல ஒத்துக்காம பிரச்சனை பண்ணுவாங்க. அதை மாதிரி இதை நினைச்சுக்கோங்க என அவர் சொல்ல போலீஸ் அனைவரையும் ரிலீஸ் செய்கிறது.

இதனையடுத்து செந்தில் அவரது மாமாவிடம் நான் இந்த குடும்பத்துக்கு தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. இங்கிருந்து  கிளம்புறேன் என சொல்கிறார். அப்போது வீட்டிற்கு வரும் மின்வாரிய ஊழியர் கரண்ட் பில் கட்டாததால் மின் இணைப்பை துண்டிக்க வந்திருப்பதாக சொல்கிறார். இதை வைத்து செந்திலுக்கு மாணிக்கம் அறிவுரை கூறுகிறார்.

தொடர்ந்து அமுதாவின் அம்மாவிற்கு படையல் போட வேண்டும் என அவரது வீட்டில் பேச்சு எழுகிறது. இதனால் சிதம்பரம் எல்லாருக்கும் சொல்லிரு என சொல்ல, இளங்கோ அமுதாவுக்கும் சொல்லிரட்டுமா என கேட்கிறார். முதலில் சிதம்பரம் கோபத்துடன் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் அய்யர் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி பொண்ணு தனியா படையல் போட்டா சரி, இப்போ கல்யாணம் ஆயிடுச்சுல்ல, அதனால மாப்பிள்ளையோட தான் வரணும் என கறாராக கூறுகிறார்.

பின்னர் இளங்கோ அமுதாவை அழைக்க செந்தில் வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். அங்கு அம்மாவுக்கு படையல் போடனும் என அழைக்க அமுதாவிடம் செல்கிறார். அதற்கு அப்புச்சி கூப்பிடாகளா என அமுதா கேட்க, இளங்கோ அம்மாவுக்கு நீ படையல் போட்டா பிடிக்கும். அதனால நீ வரனும் என கூப்பிட அமுதா யோசித்து விட்டு சம்மதிக்கிறார். மேலும் வரும் போது செந்திலையைம் அழைத்து வர வேண்டும் என இளங்கோ சொல்ல அமுதா யோசிக்கிறாள். இளங்கோ நீ செந்திலோட வந்தா தான் அம்மாவுக்கு சந்தோஷமாக இருக்கும் என சொல்ல செந்தில் வண்டியை எடுக்கிறான். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget