மேலும் அறிய

Director Suraj: வாழ்க்கையை மாற்றிய தலைநகரம்.. கைக்கொடுத்த சுந்தர் சி.. மீண்டு(ம்) வந்த இயக்குநர் சுராஜ்..!

இயக்குநர் சுராஜ் தோல்வியில் தொடங்கிய தன்னுடைய சினிமா பயணம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சுராஜ் தோல்வியில் தொடங்கிய தன்னுடைய சினிமா பயணம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்பது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி, தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, கத்தி சண்ட, சகலகலா வல்லவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் சுராஜ். இயக்குநராவதற்கு முன் சுந்தர் சி இயக்கிய பல படங்களில் பணியாற்றிய சுராஜ், தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார்.

உசுப்பேற்றி விட்ட நண்பர்கள் 

நான் சினிமா பார்த்து நிறைய பணத்தை இழந்தேன். அதனால் இழந்ததை மீண்டும் எடுக்க சினிமாவுக்குள் வந்தேன் என்றே சொல்லலாம். பார்க்காத படங்களை பற்றி கதை சொல்வது, போஸ்டரை பார்த்து கதை சொல்வது என நான் சொல்வதை கேட்ட நண்பர்கள் சினிமாவில் இயக்குநராகலாம் என உசுப்பேற்றி விட்டனர். அங்கிருந்து நேராக வந்து இயக்குநர் தளபதியை சந்தித்து ஒரு கதை சொன்னேன். 

அவர் அப்போது நம்ம அண்ணாச்சி படம் பண்ணிக் கொண்டிருந்தார். அது முடிந்தது நீங்கள் சொன்ன கதையை  படமாக எடுக்கலாம் என சொல்லி, என்னை நம்ம அண்ணாச்சி படத்தில் வேலை பார்க்க சொன்னார். அங்கு தான் எனக்கு சுந்தர் சி அறிமுகமானார். அதன்பிறகு முறைமாமன், முறைமாப்பிள்ளை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா,ஜானகிராமன், அருணாச்சலம் படம் வரைக்கும் சுந்தர் சி உடன் வேலை பார்த்தேன். 

கவுண்டமணியுடனான உறவு 

உள்ளத்தை அள்ளித்தா படம் முடிந்ததும் மேட்டுக்குடி படம் சென்றது. அதன்பிறகு கண்ணன் வருவான் படத்தில் வேலை செய்தேன். அந்த படத்தில் கார்த்தி வெளிநாட்டில் இருந்து வருவது போலவும், அதனால் வீட்டில் அசைவ உணவுகள், துரித உணவுகள் சமைக்கப்பட்டிருப்பது போலவும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். வீட்டுக்கு வரும் கார்த்திக், எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்பார். உடனே, பாட்டி உனக்காக பால்சோறு கொண்டு வந்துருக்கேன் என சொல்வார். கார்த்தியும் எனக்கு பால் சோறு என்றால் ரொம்ப பிடிக்கும்பா என சொல்லி சாப்பிடுவார். 

ஷூட்டிங் முடிந்த அன்று கவுண்டமணி என்னை அழைத்தார். சுராஜ் எங்க ஊருல நாய்க்கு தான் பால்சோறு கொடுப்பாங்க. என்னைய்யா படம் எடுக்குறீங்க. உங்களுக்கு தேவையில்லாத சப்ஜெக்ட்ல எடுக்குறீங்க. நீங்க காமெடி படம் எடுப்பீங்கன்னு வந்தா இவ்வளவு செண்டிமெண்டா படம் எடுக்குறீங்க. காமெடி படம் தானடா சொன்னீங்க என தெரிவித்தார். காரணம் கவுண்டமணிக்கு காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும். 

கைக்கொடுத்த சுந்தர்.சி

ஜானகிராமன் படம் பண்ணும்போது அதில் நடித்த சரத்குமார் என்னை பார்த்துவிட்டு நான் இயக்குநராக அறிமுகமாகிய மூவேந்தர் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. உதவி இயக்குநராக இருந்து அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற்ற நான் ஒரு வேகத்துடன் இருந்தேன். அதற்கு முன்னதாக சரத்குமார், தேவயானி, மணிவண்ணன் காம்போவில் சூர்யவம்சம் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி இருந்தது. 

ஆனால் மூவேந்தர் படம் தோல்வியால் நான் ஒரு வருடம் வெளியே தலை காட்டவில்லை. எங்க தப்பு பண்ணோம் என யோசித்தேன். அப்போது சுந்தர் சி வந்து அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்தே உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கதை, திரைக்கதை எழுதினேன் . பின்னர் குங்குமப் பொட்டு கவுண்டர் படத்தை வேறொரு பெயரில் சத்யராஜை வைத்து இயக்கினேன். தொடர்ந்து வின்னர், கிரி படத்தில் வேலை பார்த்தேன். கிரி படம் சுந்தர் சி தான் தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றால் என் தயாரிப்பில் அடுத்த இயக்குநர் நீதான் என சுந்தர் சொன்னார். சொன்னதைப் போல தலைநகரம் படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget