பாத்ரூமில் அழுதுகொண்டு கிடந்த என்னை அம்மாதான் இழுத்து வந்தார்...சிவாங்கி இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா!
தனது 21 வயதில் தான் எதிர்கொண்ட விம்சர்சனங்கள் தன்னை மனதளவில் ரொம்ப பாதித்ததாக சிவாங்கி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக் வித் கொமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார். ஒரு பக்கம் மக்கள் ஆதரவு கிடைத்தாலும் சமூக வலைதளங்களில் அதிகமான ட்ரோல்களை சந்திக்கத் தொடங்கினார் சிவாங்கி. ட்ரோல்கள் தன்னை மனதளவில் பாதித்ததாகவும் தான் பல மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாங்கி பேசியுள்ளார்.
மனம் திறந்த சிவாங்கி
"சம்பந்தமே இல்லாமல் நம்மை போட்டு அடிப்பார்கள். எனக்கு வெறும் 21 வயது தான் ஆகியிருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுவதும் நான் மன உளைச்சலில் தான் இருந்தேன். காலையில் எழுந்ததும் அழுதுகொண்டுதான் எழுவேன். எல்லாரும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் நான் நடிக்கடி உடல் சரியில்லாமல் ஆவேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏதாவது என்னை ட்ரிக்கர் செய்யும் அங்கேயே நான் அழுவேன். அந்த வயதில் இவ்வளவு விஷயங்கள் என்னை சுற்றி நடந்தது. சிலதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. ஆறு மாதம் முன்னாள் நீங்கள் எல்லாம் என்னை அவ்வளவு காதலித்தீர்கள். இப்போது என்னை அப்படி ட்ரோல் செய்கிறீர்கள். இதை என்னுடைய பெற்றோர்களிடம் கூட நான் சொல்லவில்லை. நான் சமூக வலைதளத்தில் கூட இதை பற்றி எதுவுமே செய்தது இல்லை. ஆனால் நான் தனியாக நிறைய அழுவேன். பாத்ரூமில் தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன். அப்படி ஒரு நாள் அழுதபோதுதான் என் அம்மா கதவை தட்டி என்னை வெளியே கூட்டி வந்தார். என் பெற்றோர்கள் அப்போது நீ ஃபீல் பண்ணாத நாங்க இருக்கோம் என்று சொன்னார்கள். அப்போது தான் என் பெற்றோர்களுடன் நான் ஃப்ரண்ட்ஸ் ஆனேன். " என்று சிவாங்கி இந்த பேட்டியில் கூறியுள்ளார்.






















