![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Farina Azad : "நீங்க முஸ்லீம்தானே..? நீங்க இப்படி ஒரு காரியத்த பண்றீங்க”.. ரசிகர் கேள்விக்கு நெத்தியடி பதிலடித்த ஃபரீனா!
பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை ஃபரீனா ஆசாத் வில்லியாக நடித்து வரும் வெண்பா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
![Farina Azad : Bharathi Kannamma Farina azad react fan question on instagram Farina Azad :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/88eb89dddbcf53464ddb1b7f409752481658642180_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிவி சீரியல்களில் ஒவ்வொரு காலதித்திலும் ஒவ்வொரு கதை பிரபலமாக இருக்கும். அப்படி ஒரு கண்டெண்ட் ஹிட் ஆகி விட்டால் அதை பல தொலைக்காட்சிகளில் பட்டி டிங்கிரிங் பார்த்து வேறு சீரியலாக மாற்றி போடுவது உண்டு. அப்படி கண்டெண்ட்டை ஹிட் ஆக்குவதற்காக பல புதிய முயற்சிகளை பல சேனல்கள் போட்டி போட்டு செய்கின்றனர். அப்படி பல நாட்களாக பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’.
பொதுவாக ஒரு சீரியல் என்றால் வயதானவர்கள் அதிகம் பார்ப்பார்கள், அல்லது காதல் சீரியல்கள் என்றால் இளைஞர் பட்டாளம் பார்க்கும். இந்த சீரியலில் தனித்தன்மையே இரண்டு வகையானோரும் சரி சமமாக பார்ப்பதுதான். அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்தில உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து அனைவரும் அறிவர். அந்த அளவிற்கு வில்லத்தனம் கொண்ட பாத்திரம் அது.
View this post on Instagram
சீரியல் பார்ப்பவர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களுடன் அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய போது ஒருவர், " யூ முஸ்லீம் ரைட்..!!? அப்புறம் அடிக்கடி ப்ரே பண்ணுறீங்களா..!!? யூ ஆர் டூயின் ஹராம் திங் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடுமையாக பதிலளித்த நடிகை ஃபரீனா,” சமூக ஊடகத்தில் இருப்பது. டிவி சீரியல் பார்த்து, ஒரு பிரபலத்தைப் பின்தொடர்ந்து அவரிடம் கேள்வி கேட்பதுதான் ஹராம் பட்டியலில் முதல் இடம்! முதலில் உன்னை சுத்தம் செய்து கொள், பின்பு என்னிடம் வந்து கேள்! என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)