TN Urban Local Body Election 2022 Voting | ”இந்த முறைதான் தனியா வந்து வாக்களிக்கிறேன். மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்” - வாக்களித்த பின் சசிகலா பேட்டி..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வி.கே.சசிகலா வாக்களித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் வி.கே.சசிகலா திநகர் வித்யோதயா பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளார்களை சந்தித்தார். அதில், “எப்போதும் அக்காவுடன் வந்து வாக்களிப்பேன். ஆனால் இந்த முறைதான் நான் தனியாக வந்து வாக்களிக்கிறேன். அதை நான் நினைத்துக்கொண்டே வந்தேன். தமிழ்நாடு மக்களுக்கு எல்லாம் தெரியும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். ஆகவே ஆளும் கட்சியினர் அராஜகம் செய்ய கூடாது. அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டால் போதாது தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தேனாப்பேட்டையில் வாக்களித்தார். அதன்பின்னர் தமிழ்நாடு மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.அதன்படி, மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 9 மணி நிலவரப்படி இதுதான் வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையர்
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















