மேலும் அறிய

’கோவையில் கலவரத்தை தூண்டி வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சி’ - அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

”எதிர்கட்சிகள் வன்முறையை தூண்ட முயற்சித்தாலும், வன்முறைக்கு இடம் தராமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது”

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி உடன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவார்கள். இது முதலமைச்சர் ஸ்டாலின் தந்த திட்டங்களுக்கான மணிமகுடமாக இருக்கும்.

இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் முகவர்களுடன் தேர்தல் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது. ஒரு வார்டுக்கு 100 பேரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். கலவரத்தை தூண்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சிகள் வன்முறையை தூண்ட முயற்சித்தாலும், வன்முறைக்கு இடம் தராமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


’கோவையில் கலவரத்தை தூண்டி வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சி’ - அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

எதிர்கட்சியினர் நேற்று ஒரு மண்டபத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்றவர்கள் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு, கதவுகள் மூடப்பட்டு கூட்டம் நடந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு 100 பேர் வர வேண்டுமெனவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை  இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளதாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர்கள், முகவர்கள் வருவது தான் நடைமுறை. ஆனால் ஆயிரக்கணக்கனோரை வரவழைத்து வன்முறை செய்ய எதிர்கட்சி சதித் திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை சுமுகமாகவும், அமைதியாகவும் நடக்க அதிகாரிகளுக்கு திமுக கூட்டணியினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சில இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் எதிர்கட்சியால் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்கள். அவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்சனை ஏற்பட்டது. வாக்குப்பதிவைப் போல வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை விரைவாக நடக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


’கோவையில் கலவரத்தை தூண்டி வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சி’ - அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடந்துள்ளது. நாங்கள் ரகசிய கூட்டம் போடவில்லை. எதிர்கட்சி ரகசிய கூட்டம் நடத்தி கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயார். சட்டமன்ற உறுப்பினர் வாக்குச் சாவடி மையங்களில் ஆய்வுக்கு சென்றுள்ளார். எப்படி அவர் ஆய்வுக்கு செல்ல முடியும்? அதிகாரம் யார் கொடுத்தது? அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆய்வு  என சென்றுள்ளார். அது நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும் என்பதை காட்டும் வகையில் இருந்தது. இது தொடர்பாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தேர்தலில் முகவரி மாற்றங்கள் இருந்ததால் பூத் சிலிப் தருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தான் தர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget