மேலும் அறிய

Local Body Election 2022 | நெல்லை வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

1127 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1127 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தமாக 2254 இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி  மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது, மொத்தமாக உள்ள 397 பதவிகளுக்கு 9 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 388 பதவி இடங்களுக்கு 1790 பேர் போட்டியிடுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக 7,54,504 பேர் வாக்களிக்க உள்ளனர்,  இதற்காக 932 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை  55 வார்டுகளுக்கு 490 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்களிக்க தயாராக வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு எந்திரங்களில் கடந்த வாரம் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் பொறுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு எந்திரங்கள் , அழியா மை, பேலட்பேப்பர் உள்ளிட்ட 68 பொருட்கள்  மற்றும்  24 பொருட்கள் அடங்கிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்  ஆகியவை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஷ்ணுசந்திரன் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


Local Body Election 2022 |  நெல்லை வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

 

குறிப்பாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1127 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1127 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தமாக 2254 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிசாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் இந்த தேர்தல் பணியில் 3,728  அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து பணியாணை வழங்கப்பட்டு அவர்கள் உடனடியாக வாக்குசாவடி மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.


Local Body Election 2022 |  நெல்லை வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

 இதுபோன்று  அம்பாசமுத்திரம் , விக்கரமசிங்கபுரம் , மற்றும் களக்காடு ஆகிய நகராட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள வாக்குபதிவு எந்திரங்கள் என அனைத்து வாக்குச்சாவடிக்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 274 வாக்குச்சாவடிக்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார்  பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர், அதே போல நெல்லை மாவட்டத்தில் 22 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையானது மொத்தம் 5 இடங்களில் நடைபெற உள்ளது, இதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது,

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget