மேலும் அறிய

Local Body Election | ’கோவையில் முகாமிட்டுள்ள கரூர்க்காரர்களை வெளியேற்ற வேண்டும்’ - வானதி சீனிவாசன்

”கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத திமுக, அதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இந்த முறை விதிகளை மீறி செயல்படுகின்றது”

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையின் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதனை தட்டிக்கேட்டால் பாஜகவினரை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பணம் கொடுப்பதை தடுக்கும் போது கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. 

நேற்று 70-வது வார்டில் பணம் பட்டுவாடா செய்பவர்களை பிடித்து ஒப்படைத்துள்ளோம். கடந்தமுறை சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக, அதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இந்த முறை விதிகளை மீறி செயல்படுகின்றது. உடனடியாக கோவை மாவட்டத்தில் இருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தொழில் செய்யும் பலரை வெளியூர்கார்ர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். வெளியூர்காரர்களை மிரட்டினால் வாக்கு சீட்டின் வழியாக பதில் சொல்லப்படும்.

சிறுவாணி அணையின் முழு கொள்ளவு எட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினையை கூட சரி செய்ய முடியவில்லை. இதை பற்றி கண்டு கொள்ளாத திமுக அரசு மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுக்கின்றனர்.  பா.ஜ.க வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  நாளை முழுவதும் மாநில தலைவர்  அண்ணாமலை கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார். கோவையில் இருக்கும் விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அது இடமாற்றம் செய்யப்படுகின்றது திமுகவினர் மிரட்டல், பணம் ஆகியவற்றில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் எண்ணுகின்றனர்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நான் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்பது தவறு. தேசிய தலைவராக இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் செல்லவேண்டி இருப்பதால் ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. நாளை கடைசி நாள் கோவை தெற்கு தொகுதியில் முழுமையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget