மேலும் அறிய

+2 தேர்வை ஒத்திவைத்து நடத்த தமிழக அரசு திட்டமா? அமைச்சர் விளக்கம்

நுழைத்தேர்வு என்பது அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாலும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது.

மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தேர்வுகளை எப்படி நடத்துவது எப்படி என்று கருத்துகளை தெரிவிக்க கூறினார்களே தவிர தேர்வுகளை ரத்து செய்யலாமா என எந்த கருத்தும் கேட்கவில்லை என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். இன்று திருச்சியில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ், தமிழகத்தில் +2 தேர்வுகளை நடத்துவது பற்றி நாளை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார் எனவும் கூறினார்.

 

நாளை முடிவு:

சி.பி.எஸ்.இ சார்பில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தேர்வுகள் ரத்தாகுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “தேர்வுகளை நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி, அனைத்து கருதுகளும் முதல்வரிடம் கொடுக்கப்படும். கருத்துகள் அடிப்படையில் உரிய முடிவை முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார்” என்றார்.


+2 தேர்வை ஒத்திவைத்து நடத்த தமிழக அரசு திட்டமா? அமைச்சர் விளக்கம்

மத்திய அரசு சொன்னது என்ன?

தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வுகளை எப்படி நடத்தலாம் என கருத்து கூறுமாறு மட்டுமே அந்த கடித்தத்தில் கூறப்பட்டிருந்ததாகவும் தேர்வகளை ரத்து செய்யலாமா என கேட்கவில்லை என்றார், அதோடு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கூட பலரும் தேர்வினை ரத்து செய்ய வேண்டாமென கூறியதாகவும் ஆனால் பிரதமர் இப்போது ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.

மேலும் “பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டதோ அதே போன்று ரத்து செய்யப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என கூறியுள்ளார்கள், ஆனால் எதன் அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கீடு செய்வார்கள் என்று தெரியவில்லை எனவும் கூறினார்.


+2 தேர்வை ஒத்திவைத்து நடத்த தமிழக அரசு திட்டமா? அமைச்சர் விளக்கம்

என்ன முடிவுக்கு வாய்ப்பு?

ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசு தேர்வினை நடத்துவது என்பதையே தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது. ஏனெனில் நுழைத்தேர்வு என்பது அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாலும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது.

இது பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்களுக்கு தேர்வு எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களது உடல்நிலையும் முக்கியம்” என கூறினார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சில முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக,

 

  1. தேர்வினை ஒத்தி வைப்பது – கல்லூரி சேர்க்கை சிக்கலாகலாம்
  2. குறிப்பிட்ட பாடங்களுக்கு தேர்வு
  3. ஆன்லைன் வழித்தேர்வு – சாத்தியம் குறைவு
  4. தேர்வு ரத்து – மதிப்பெண் முறை கணக்கீடு சிக்கலாகும்

 

தமிழ்நாட்டில் +2 தேர்வு நடக்குமா இல்லையா என்பது பற்றி நாளை முடிவு தெரிந்து விடும். அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், உ.பி. ஆகியவை தேர்வை ரத்து செய்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget