TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்: குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு குழப்பம்! புதிய தேதிகள் அறிவிப்பு!
TNPSC Exam Date Change: குரூப் 2 தேர்வோடு முரண்பட்ட குரூப் 1சி தேர்வு; தேதி மாற்றம்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வும் மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வும் ஒரே நாளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி மாற்றி அறிவித்துள்ளது.
குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி
முன்னதாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றன. இதில் சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மறு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த நாளில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வானது நடைபெறுகிறது. இதனால் இந்தத் தேதியை மாற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் குரூப் 1 சி தேர்வு
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், ’’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ( குரூப் -IC பணிகள்) தமிழ்நாடு பள்ளி கல்வி பணிகளில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வானது 12.03.2026 15.03.2026 வரை நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மேற்கண்ட பதவிக்கான முதன்மைத் தேர்விற்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டு பின்வரும் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:
22.03.2026 மு.ப - தாள்-I தமிழ் மொழி தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்)
23.03.2026 மு.ப - தாள்-II பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
24.03.2026 மு.ப - தாள்-III பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
25.03.2026 மு.ப - தாள்-IVகல்வியியல் (பட்டப்படிப்புத் தரம்) (CBT முறை)
மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் 12.03.2026 (வியாழன்)-க்குள் பதிவேற்றம் செய்யப்படும்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள், அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
























