மேலும் அறிய

TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 , 2, 2ஏ, 4 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; எங்கே, எப்போது, பங்கேற்பது எப்படி?

TNPSC Free Coaching 2025: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படவிருக்கும் போட்டித்  தேர்வுகளுக்கு  கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்க உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 , 2, 2 a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இயங்கி வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் நவம்பர் 2-ம் தேதி முதல் பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் பயிற்சி வகுப்புகளை தொடங்குகிறது.

எதிர்வரும் 2026-ம் ஆண்டிற்கான  போட்டித் தேர்வு கால அட்டவணையை (Annual Planner) தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.‌ TNPSC-யின் பாடத்திட்டங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு விடையளிக்கும் வகையில் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இந்த பயிற்சி வகுப்பை தொடங்குவது குறித்து சென்னை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

TNPSC அடுத்தடுத்து வெளியிட இருக்கும் அறிவிக்கைகளில் அறிவிக்கவிருக்கும் தேர்வுகளுக்கு டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் முன்கூட்டியே வகுப்புக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. புதிதாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது போட்டியிடும் தகுதியை உயர்த்திக் கொண்டு வெற்றிபெற முன்வர வேண்டும்.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நுட்பமாக ஆராய்வதுடன் பொதுநிகழ்வுகளுடன் இணைத்து பார்த்து விடைகளை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் தனது கற்றலின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தன்னை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான திட்டத்துடன் வகுப்புகளில் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியை அளிக்க உள்ளோம்.

மாணவர்கள் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழிகாட்டியாக இந்திய ஆயுள் மற்றும் பொதுக்காப்பீட்டின் ஊழியர்களை உள்ளடக்கிய  அகில இந்திய இன்ஷியுரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

1300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுப்பணி

மேலும் வங்கி, மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் மாணவர்களுடன் இணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவுகளை நிறைவேற்றி வருகின்றனர்.  இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.

 மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுத்துறைகளில்  ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கு அறிவிப்பு வரும்போது, மாணவர்கள் அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே TNPSC-யின் குரூப் 1, 2, 2ஏ, மற்றும் 4 பிரிவுகளில் ஏற்படும்  காலிப்பணியிடங்களுக்கு    வகுப்புகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.

எங்கே? எப்போது?

சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

பங்கேற்பது எப்படி?

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன்  வர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு - 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712.

ஆண்டு முழுவதும் கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் நேரடியாகவும் அணுகி  கூடுதல் விவரங்களை பெறலாம் என்று அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
Embed widget