TRB TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்- நாளை கடைசி- எதற்கு தெரியுமா?
TRB TET Exam 2025: டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், இதற்கு மொத்தம் 4,80,123 பேர் விண்ணப்பித்துள்ளதாக ப்ள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) அறிவிக்கை எண். 03/2025, 11.08.2025 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 08.09.2025 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியதால் மேற்காண் தேர்விற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 10.09.2025 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு (TNTET) விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள 13.09.2025 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
- இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
- விண்ணப்பதாரர்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள சமர்ப்பி" (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- கடைசியாக உள்ள சமர்ப்பி" (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பம் கணக்கில் அன்னாரின் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் மாற்றங்களை செய்யமுடியாது.
- திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்டபின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fileds) திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
- திருத்தம் (Edit Option) செய்த பின்னர் print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் declaration -ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் கைபேசி எண் (Mobile No.), மின்னஞ்சல் முகவரி (E-mail ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
- இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் பொறுப்பாவர். ஏற்படும் மாற்றங்களில் விண்ணப்பதாரரே
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே
செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், இதற்கு மொத்தம் 4,80,123 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது யார்?
ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.
டெட் தேர்வு எப்போது நடக்கிறது?
டெட் தேர்வு இந்த ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
எதற்காக டெட் தேர்வு?
ஆசிரியர் பணியில் சேரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆகும்.






















