மேலும் அறிய

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

கடந்த அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகையினையும் வழங்க வேண்டும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி மாவட்டத் தலைவர் மாநிலப் பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப் பொருளாளர் இளங்கோ நிதி பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்புச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் நன்றியுரையும் நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தில் புரவலர்கள் அருள் சுந்தர்ராஜன், முனைவர் சாமி சத்திய மூர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன், முனைவர் பீட்டர் ராஜா, ராஜீ மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர்கள் மாநில இணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி அமைப்பாளர்கள் மாநில சட்ட செயலாளர்கள், மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

01.01.2018ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணி மாறுதல் மூலம். பதவிஉயர்வு பெற்று உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நிம்மதியாக நிர்வாகம் செய்யும் சூழல் தற்போது இல்லை. ஆகவே 01.01.2018 ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்காலப்பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் முது கலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் தயார் செய்து மேல்நிலைபப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பா அல்லது. மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை(Option) ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

மேலும், 2018- ஆம் ஆண்டுவரை 5:2 மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி என்ற நடைமுறையில் இருந்த உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த 5:2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  2019-2020 பள்ளிகளுக்கு கல்வி ஆண்டில் கோவிட்- 19 தொற்று காரணமாக இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றேர் ஆசிரியர் கழக நிதி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 35 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமும், 25 சதவீதம் நேரடி நியமன மூலமும் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர் பணியிட நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் 40:35:25 என்ற விகிதாச்சாரத்தையே முதன்மைக்கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்விலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம்  ஆசிரியராகப் பணியில் சேர்ந்த  ஒரு சிலருக்கு இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்த ஆசிரியரும் முதன்மைக்கல்வி அலுவலர் பணிநிலைக்கு மேல் கல்வித்துறையில் பதவி உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையினையும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.