மேலும் அறிய

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

கடந்த அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகையினையும் வழங்க வேண்டும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி மாவட்டத் தலைவர் மாநிலப் பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப் பொருளாளர் இளங்கோ நிதி பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்புச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் நன்றியுரையும் நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தில் புரவலர்கள் அருள் சுந்தர்ராஜன், முனைவர் சாமி சத்திய மூர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன், முனைவர் பீட்டர் ராஜா, ராஜீ மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர்கள் மாநில இணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி அமைப்பாளர்கள் மாநில சட்ட செயலாளர்கள், மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

01.01.2018ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணி மாறுதல் மூலம். பதவிஉயர்வு பெற்று உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நிம்மதியாக நிர்வாகம் செய்யும் சூழல் தற்போது இல்லை. ஆகவே 01.01.2018 ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்காலப்பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் முது கலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் தயார் செய்து மேல்நிலைபப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பா அல்லது. மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை(Option) ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.


மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

மேலும், 2018- ஆம் ஆண்டுவரை 5:2 மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி என்ற நடைமுறையில் இருந்த உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த 5:2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  2019-2020 பள்ளிகளுக்கு கல்வி ஆண்டில் கோவிட்- 19 தொற்று காரணமாக இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றேர் ஆசிரியர் கழக நிதி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 35 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமும், 25 சதவீதம் நேரடி நியமன மூலமும் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர் பணியிட நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் 40:35:25 என்ற விகிதாச்சாரத்தையே முதன்மைக்கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்விலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம்  ஆசிரியராகப் பணியில் சேர்ந்த  ஒரு சிலருக்கு இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்த ஆசிரியரும் முதன்மைக்கல்வி அலுவலர் பணிநிலைக்கு மேல் கல்வித்துறையில் பதவி உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையினையும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget