மேலும் அறிய

தருமபுரி வாசிக்கிறது என்ற தலைப்பில் மாணவர்களுடன் புத்தகம் வாசித்த மாவட்ட ஆட்சியர்

புத்தகத்திருவிழாவில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குகளும் இடம் பெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தி வருகிறது. இந்த புத்தகத்திருவிழா தருமபுரி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா  செப்டம்பர் 8ந் தேதி முதல் 17ந் தேதி வரை தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.  இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி வாசிக்கிறது என்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தொடங்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திதது  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கூறியதாவது:
 
தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று ஆசிரியர் தினத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 29 கல்லூரிகளிலும்,  1607 பள்ளிகளிலும்  நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகம் வாசித்தனர். தருமபுரி புத்தகத் திருவிழா தருமபுரி வள்ளலார் திடலில் வரும் 8ந் தேதி முதல் 17ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த புத்தகத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இடம் பெறுகிறது. நாள்தோறும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாநில அளவில் உள்ள சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.  இந்த புத்தகத்திருவிழா அரங்குகளில் உள்ள புத்தகங்கள் சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரையிலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும்  சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி வாசிக்கிறது என்ற தலைப்பில் மாணவர்களுடன் புத்தகம் வாசித்த மாவட்ட ஆட்சியர்
 
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்திருவிழாவில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குகளும் இடம் பெற உள்ளது. அதேப்போல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி, தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கி கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட பொதுமக்கள் இந்த புத்தகத் திருவிழாவிற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறும், இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவையினர், அரசு துறை அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
TN School Leave: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget