மேலும் அறிய

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் பணியாற்றுவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள ஓட்டுநர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி  மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுகத் திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து தான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர் பணிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன. 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் கொண்டிருக்க வேண்டும் எனவும், இப்பக்கத்தில் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் இவர்களது விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக The Executive Engineer, Fishing Harbour Project Division, Integrated Animal Husbandry and Fisheries and Fishermen Welfare Department Office Complex, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 ஓட்டுநர் உரிமம் இன்றைய தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின் படி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.  நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதோடு விண்ணப்பதார் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் போன்ற வழிமுறைகள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும், இதர வகுப்பினர் எனில் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

எனவே அறிவிப்பில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூபாய் ரூ. 19,500 – 62,000/- சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget