மேலும் அறிய

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் பணியாற்றுவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள ஓட்டுநர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி  மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுகத் திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து தான் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர் பணிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன. 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதிகள் கொண்டிருக்க வேண்டும் எனவும், இப்பக்கத்தில் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் இவர்களது விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக The Executive Engineer, Fishing Harbour Project Division, Integrated Animal Husbandry and Fisheries and Fishermen Welfare Department Office Complex, Nandanam, Chennai- 600 035 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 ஓட்டுநர் உரிமம் இன்றைய தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின் படி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.  நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதோடு விண்ணப்பதார் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் போன்ற வழிமுறைகள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும், இதர வகுப்பினர் எனில் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மீன்வளத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

எனவே அறிவிப்பில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூபாய் ரூ. 19,500 – 62,000/- சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget