மேலும் அறிய

RTE: இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கை - நிலுவை கட்டணத்தை உடனே வழங்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நிலுவை கல்விக் கட்டணத்தை, அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. 

இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நிலுவை கல்விக் கட்டணத்தை, அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. 

மத்திய அரசு அறிமுகம் செய்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்புவரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும். 

இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வியாண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 20ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பப் பதிவு ஒரு மாதத்துக்கு ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டிபிஐ வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்துக்கு, தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு  (FePSA) வைத்துள்ள கோரிக்கை: 

''மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) சுயநிதிப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பில் 25% இலவசமாக சேர்க்கை செய்ய, மாணவர்களை தேர்வு செய்து அரசே அந்தந்த பள்ளிக்கு அனுப்புகிறது. அனைத்துப் பள்ளிகளும் அம்மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பித்து வருகிறோம்.

2021-22 கல்வி கட்டணமே வரவில்லை

RTE சட்டப்படி இலவசமாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகும் செலவை, அரசு அதே கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக வழங்க வேண்டும். ஆனால் 2021-22 கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தையே அரசு இன்னும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மேலும் 2022-23 ஆம் கல்வி ஆண்டும் முடியும் நிலையில் உள்ளது. ஆனால் இவ்வாண்டிற்கான Team Visit கூட இன்னும் வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அடுத்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

2 ஆண்டு கல்விக் கட்டணத்தை இதுவரை வழங்காத பள்ளிக்கல்வித் துறையின் இவ்வாறான அலட்சியப் போக்கால் பள்ளி நிர்வாகிகள் பள்ளி நடத்துவதற்கே தடுமாறுகின்றனர். பலர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் கால்வாசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்காததால், பள்ளி நிர்வாகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

கல்விக் கட்டணத்தை உயர்த்துக

அதேசமயம், பள்ளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசு மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது மின் கட்டணம், சொத்து வரி, பள்ளி புதுப்பித்தல் கட்டணம், வைப்புத்தொகை, ஆய்வு க்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் அரசு அதிகரித்துள்ளது. ஆனால் பள்ளி மாணவர்களிடம் வாங்க வேண்டிய கல்விக் கட்டணங்களை அதே அடிப்படையில் உயர்த்த வேண்டும். அதுவும் இல்லை. அரசு ஒதுக்கீடு செய்யும் மிக குறைந்த கல்வி கட்டணத்தையும் 2 ஆண்டுகள் கழித்தே வழங்குகிறது.

பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய RTE கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்கும்வரை அந்தந்த ஆண்டிற்கான மின் கட்டணம், சொத்துவரி, ESI போன்ற கட்டணங்களைச் செலுத்த கால அவகாசம் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

RTE திட்டத்தில் 25% மாணவர்களை சேர்க்க அரசு எங்களை வற்புறுத்தாமல் இருந்தால், நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் கட்டணம் பெற்று சிறப்பாக பள்ளிகளை நடத்துவோம். ஆகவே, இதுவரை வழங்காமல் உள்ள 2021-22 க்கான கல்விக் கட்டணத்தை பிப்ரவரி மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். 

அதேபோல இந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டடத்தை வரும் மே மாத இறுதிக்குள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் அடுத்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 25% இலவச சேர்க்கையை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டி வரும்''. 

இவ்வாறு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை – பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
Vijay to Meet Governor: கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
TVK Vs VCK: சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
Embed widget