மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விவரம்!
NMMS Exam 2026: 2026 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2026 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025.
கால அவசாசம் 23.12.2025 வரை நீட்டிப்பு
தற்போது, மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 23.12.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.






















