மேலும் அறிய

NEET Re Exam: வெளியான அறிவிப்பு: இந்த மாணவர்களுக்கெல்லாம் நீட் மறுதேர்வு- தேசியத் தேர்வுகள் முகமை அதிரடி!

நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வறையில் நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

எங்குமே முறைகேடு நடைபெறவில்லை

எனினும் எங்குமே முறைகேடு நடைபெறவில்லை என்றே என்டிஏ திட்டவட்டமாகத் தற்போதுவரை தெரிவித்து வருகிறது.

ஜூன் 23ஆம் தேதி நீட் மறுதேர்வு

நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை இன்றே (ஜூன் 13) வெளியாகும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மறுதேர்வு முடிவுகளையும் வெளியிட என்டிஏ முடிவுசெய்து அறிவித்துள்ளது.

முன்னதாக தேர்வு மையங்களில் ஏற்பட்ட நேரம் குறைவாக வழங்கப்பட்ட குளறுபடிகள் காரணமாக, சில மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதை எதிர்த்து 10-க்கும் மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்தபோதுதான் தேசிய தேர்வுகள் முகமை இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

வழக்கு விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?

இந்த விவகாரத்தால் மற்ற மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Embed widget