மேலும் அறிய

NCERT Textbooks: தேச பக்தியை வளர்க்க பள்ளி பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம்: என்சிஇஆர்டி குழு பரிந்துரை

இதன் மூலம் மாணவர்கள் ராமர் உள்ளிட்டோர் குறித்து அறிந்துகொள்ளவும் காவியத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள்ளவும் முடியும்.

பள்ளி பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைச் சேர்க்க வேண்டும் என்று என்சிஇஆர்டி உயர்மட்டக் குழு பரிந்துரை அளித்துள்ளது.

என்சிஇஆர்டி சமூக அறிவியல் பாடத்திட்டக் குழு பேராசிரியர் சிஐ ஐசக் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தக் குழு தற்போதைய சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைப் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி வரலாறு பாடம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். அவை பாரம்பரிய, இடைக்கால, பிரிட்டிஷ் மற்றும் நவீன இந்தியா என்று பிரிக்கப்பட்டு, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைச் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தி, பெருமித உணர்வை வளர்க்க இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தலைவர்களின் வரலாறு

மேலும், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேதங்கள் குறித்தும் ஆயுர்வேதம் தொடர்பாக பாட நூல்களைச் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை அனைத்துக்கும் என்சிஇஆர்டி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக என்சிஇஆர்டியில் 19 பேர் அடங்கிய தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் குழு கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவே அனைத்து வகுப்புகளுக்குமான என்சிஇஆர்டி பாடத்திட்டம், நூல்கள், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இறுதி செய்யும். இந்த நிலையில், சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை இந்தக் குழுவே ஆய்வு செய்து, இறுதி செய்ய உள்ளது.

பாரம்பரிய இந்தியா

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராசிரியர் ஐசக், ‘’இதுநாள் வரை இந்திய வரலாறு, இடைக்கால, பிரிட்டிஷ் மற்றும் நவீன இந்தியா என மூன்றாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது.  தற்போது பாரம்பரிய இந்தியா என்று புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை அதில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளோம்.

இதன் மூலம் மாணவர்கள் ராமர் உள்ளிட்டோர் குறித்து அறிந்துகொள்ளவும் காவியத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள்ளவும் முடியும்.

ஒவ்வொரு வகுப்பறையின் சுவரிலும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை, அந்தந்த உள்ளூர் மொழிகளில் எழுதி வைக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்’’ என்று ஐசக் தெரிவித்துள்ளார்.

பாரத் பெயர்

முன்னதாக, அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என என்சிஇஆர்டி விளக்கம் அளித்தது.

பிற நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு மற்றும் இதிகாசங்கள் தமிழ் மொழியில் பாடத்திட்டமாக இருக்கின்றன. இதற்கிடையில் 2021ஆம் ஆண்டு, சவுதி அரேபிய அரசு இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தங்களுடைய பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Embed widget