மேலும் அறிய

தஞ்சாவூர் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு: ஆசிரியர்கள் அடுத்த கட்டத்திற்கு தயார் - கல்வி அமைச்சர் தகவல்

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர்: பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் அடைவுத் தேர்வு அறிக்கை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 கேள்விகள், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 கேள்விகள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 கேள்விகள் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இதில், சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்களுக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். வெறும் பாடத்தைக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், கற்றல் அடைவை அடைந்துள்ளனரா? அதைப் புரிந்து கொண்டுதான் அடுத்த வகுப்புக்கு சென்றனரா? என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த முறை நாங்கள் முன்னேற்ற நிலையில் இருப்போம் என ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அளவில் அடைவுத் திறன் தொடர்பாக 25 ஆயிரம் மாணவர்களை மட்டுமே ஏசர் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையினர் 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை எட்டுவோம். அடைவுத் திறன் தொடர்பான ஏசர் அறிக்கையை யுனெஸ்கோ கடுமையாக திட்டி எழுதியுள்ளது. ஏசர் என்ற பெயரில் கொடுக்கப்படும் அறிக்கை மிகவும் அபத்தமானது என்றும், அதை யாரும் பின்பற்றக்கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் மொத்த அடைவுத் திறன் 58.41 சதவீதம்.  மதுக்கூர், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்கள் சிறப்பாக உள்ளன. சராசரியாக உள்ள திருவையாறு, அம்மாபேட்டை, பூதலூர் ஆகிய வட்டாரங்கள் அடுத்த முறை நல்ல நிலையை அடைவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு வட்டாரங்களும் அடுத்த முறை சிறப்பிடத்தைப் பெற வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget