மேலும் அறிய

தஞ்சாவூர் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு: ஆசிரியர்கள் அடுத்த கட்டத்திற்கு தயார் - கல்வி அமைச்சர் தகவல்

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர்: பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் சிறப்பாகவும், பின் தங்கியும் இருக்கின்றனர் என்பது தலைமையாசிரியர்களைச் சந்தித்து கலந்தாலோசிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் அடைவுத் தேர்வு அறிக்கை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 கேள்விகள், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 கேள்விகள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 கேள்விகள் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இதில், சிறப்பாக செயல்பட்ட வட்டாரங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து பின்தங்கிய வட்டாரங்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்களுக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். வெறும் பாடத்தைக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், கற்றல் அடைவை அடைந்துள்ளனரா? அதைப் புரிந்து கொண்டுதான் அடுத்த வகுப்புக்கு சென்றனரா? என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த முறை நாங்கள் முன்னேற்ற நிலையில் இருப்போம் என ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அளவில் அடைவுத் திறன் தொடர்பாக 25 ஆயிரம் மாணவர்களை மட்டுமே ஏசர் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையினர் 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை எட்டுவோம். அடைவுத் திறன் தொடர்பான ஏசர் அறிக்கையை யுனெஸ்கோ கடுமையாக திட்டி எழுதியுள்ளது. ஏசர் என்ற பெயரில் கொடுக்கப்படும் அறிக்கை மிகவும் அபத்தமானது என்றும், அதை யாரும் பின்பற்றக்கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் மொத்த அடைவுத் திறன் 58.41 சதவீதம்.  மதுக்கூர், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்கள் சிறப்பாக உள்ளன. சராசரியாக உள்ள திருவையாறு, அம்மாபேட்டை, பூதலூர் ஆகிய வட்டாரங்கள் அடுத்த முறை நல்ல நிலையை அடைவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு வட்டாரங்களும் அடுத்த முறை சிறப்பிடத்தைப் பெற வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget