மேலும் அறிய

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், கல்வித்துறையுடன் இணைப்பா?- தமிழக அரசு விளக்கம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கப்படாது. தனியாகவே இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கள்ளர்‌ சீரமைப்புப்‌ பள்ளிகளைப்‌ பள்ளிக்கல்வித்‌ துறையுடன்‌ இணைக்கும்‌ நடவடிக்கை எதையும்‌ அரசு மேற்கொள்ளவில்லை என்று பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை விளக்கம்‌ அளித்துள்ளது.

முன்னதாக, எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மதுரையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கப் படுவதாகவும் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இணைப்பு நடவடிக்கை எதுவும் இல்லை என்று பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சமூக நீதியை நிலைநாட்டுவதில்‌ பெரும்‌ அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல்‌ அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்‌, மக்கள்‌ தொகையில்‌ பெரும்‌ பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ முன்னேற்றத்திற்காகப்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது.

299 கள்ளர்‌ சீரமைப்புப்‌ பள்ளிகளில்‌ அனைத்து வசதிகள்


குறிப்பாக, பிரமலைக்‌ கள்ளர்‌ வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ கல்வி முன்னேற்றத்திற்காகவும்‌ சிறப்புத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி வரும்‌ தமிழ்நாடு அரசு, பிரமலைக்‌ கள்ளர்‌ வகுப்பைச்‌ சேர்ந்தவர்கள்‌ அதிகம்‌ வாழும்‌ தேனி, மதுரை, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ பிற்படுத்தப்பட்‌டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்‌டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கிவரும்‌ 299 கள்ளர்‌ சீரமைப்புப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும்‌ வழங்கி வருகிறது.

மேலும்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌, இலவச மருத்துவப்‌ பரிசோதனைகள்‌, ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களையும்‌ தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக்கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இணைப்பா?

இந்த சூழ்நிலையில்‌, இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில்‌ வெளி வந்துள்ள செய்திகள்‌ முற்றிலும்‌ தவறானதாகும்‌. இப்பள்ளிகள்‌
பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத் துறையின்‌ கீழ்‌ தனித்துவத்தோடு இயங்கி வரும்‌ சூழ்நிலையில்‌, அவற்றை மேலும்‌ மேம்படுத்தத்‌ தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனவே, இப்பள்ளிகளை பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இணைப்பதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள்‌ உண்மைக்குப்‌ புறம்பானதும்‌ மற்றும்‌ உள்நோக்கம்‌ கொண்டதும்‌ ஆகும்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget