மேலும் அறிய

பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு; ஏன்?- தமிழக பாடநூல் கழகம் பதில்

பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை பாடநூல் கழகம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சமர்ச்சீர் பாடப் புத்தகங்களை எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை, தமிழக பாடநூல் கழகம் அச்சிட்டு, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நூல்கள்

இந்த நூல்கள் அனைத்தும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்குப் பாட நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.40 முதல் ரூ.90 வரை இந்த விலை உயர்வு உள்ளது. 390 ரூபாயாக இருந்த 1ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 550 ரூபாயாக அதிகரித்துள்ளது. 380 ரூபாயாக இருந்த 2ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 530 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, 430 ரூபாயாக இருந்த 3ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 620 ரூபாயாக அதிகரித்துள்ளது.

470 ரூபாயாக இருந்த 4ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 650 ரூபாயாகவும் 510 ரூபாயாக இருந்த 5ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 710 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

ரூ.1200 ஆக உயர்வு

790 ரூபாயாக இருந்த 6ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1110 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 1200 ரூபாயாக இருந்த 7ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 860 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல 690 ரூபாயாக இருந்த 8ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது. 9ஆம் வகுப்புப் புத்தகத்தின் விலை 1,110 ரூபாயாகவும் 10ஆம் வகுப்பு புத்தக விலை ரூ.1130 ஆகவும் உயர்ந்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம்

இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழலில், காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு; ஏன்?- தமிழக பாடநூல் கழகம் பதில்

என்ன காரணம்?

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு பாடப் புத்தகங்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2018ஆம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டபோது விலை திருத்தியமைக்கப்பட்டது.

தற்போது பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு ( தாள், மேல் அட்டை, அச்சு ஊதியம்)கணிசமாக அதிகரித்துள்ளதால், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget