மேலும் அறிய

பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு; ஏன்?- தமிழக பாடநூல் கழகம் பதில்

பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை பாடநூல் கழகம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சமர்ச்சீர் பாடப் புத்தகங்களை எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை, தமிழக பாடநூல் கழகம் அச்சிட்டு, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நூல்கள்

இந்த நூல்கள் அனைத்தும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்குப் பாட நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.40 முதல் ரூ.90 வரை இந்த விலை உயர்வு உள்ளது. 390 ரூபாயாக இருந்த 1ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 550 ரூபாயாக அதிகரித்துள்ளது. 380 ரூபாயாக இருந்த 2ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 530 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, 430 ரூபாயாக இருந்த 3ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 620 ரூபாயாக அதிகரித்துள்ளது.

470 ரூபாயாக இருந்த 4ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 650 ரூபாயாகவும் 510 ரூபாயாக இருந்த 5ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 710 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

ரூ.1200 ஆக உயர்வு

790 ரூபாயாக இருந்த 6ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1110 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 1200 ரூபாயாக இருந்த 7ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 860 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல 690 ரூபாயாக இருந்த 8ஆம் வகுப்பு பாட நூலின் விலை, 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது. 9ஆம் வகுப்புப் புத்தகத்தின் விலை 1,110 ரூபாயாகவும் 10ஆம் வகுப்பு புத்தக விலை ரூ.1130 ஆகவும் உயர்ந்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனம்

இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழலில், காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு; ஏன்?- தமிழக பாடநூல் கழகம் பதில்

என்ன காரணம்?

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு பாடப் புத்தகங்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2018ஆம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டபோது விலை திருத்தியமைக்கப்பட்டது.

தற்போது பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு ( தாள், மேல் அட்டை, அச்சு ஊதியம்)கணிசமாக அதிகரித்துள்ளதால், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget